இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16 O அ. ச. ஞானசம்பந்தன்
- ‘பதி இழந்தனம் பாலனை இழந்தனம் படைத்த
- நிதி இழந்தனம் இனி எமக்கு உளது என நினைக்கும்
- கதி இழக்கினும் கட்டுரை இழக்கிலேம் என்றான்;
- மதி இழந்து தன் வாய் இழந்து அருந்தவன் மறைந்தான்'
“நாட்டை இழந்தேன்; குழந்தையை இழந்தேன்; செல்வத்தை இழந்தேன். இத்துணையும் ஏன் இழந்தேன்? இனி வீடுபேற்றை (மோட்சத்தை) அடையலாம் என்று நினைத்தேன். அந்த மோட்சத்தையே (கதி) இழக்கினும் சரி! என் மொழி தவற மாட்டேன்!” என்றான். அறிவை, யும், பின் சொல்லும் வகையையும் இழந்து முனிவன் மீண்டான்.
- ‘வேண்டாமை' அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை;
- யாண்டும் அஃதொப்பது இல்
என்பது இவற்றால் விளங்குகின்றதன்றோ?