பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?

யாட்டில் தன்னை மறந்து மகிழ்தல் ஆகிய இவற்றிலேயே அவள் உள்ளம் சென்றுவிட்டமையால், அவள், கணவன் தரும் இன்பத்திற்காக ஏங்கி நிற்கும் நி3 குறைந்துவிட்டது.

இளைஞன் நிலை அவ்வாறு ஆகிவிடவில்லை. இன்பம் நுகர் வேட்கை அவன் உள்ளத்தில் அடங்கிவிடவில்லை மனையறத் திற்கு அவன் ஆற்றவேண்டிய கடமை எதுவும் அவனுக்கு இப்போது இல்லை, அது மனையறத்திற்கு வேண்டும் மாநிதியை ஈட்டித் தந்துவிட்ட அப்போதே முடிந்து விட்டது. ஆற்றவேண்டிய கடிமை இல்லாது போகவே, அவன் உள்ளம் காதல் உணர்வில் ஆழப் பதிந்துவிட்டது: ஆல்ை அவ்வின்பத்தை மனைவியால் எதிர் நோக்குதல், மகப்பேறுற்றுத் தாயாம் தகுதி பெற்றிருக்கும் அந்நிலையில் இயலாததாயிற்று. மனேவியைப்போல் தன் மனத்தில் எழும் வேட்கையை அடக்கிக் கொள்வதும் அவனால் இயலவில்லை. மனைவியோல், அவன் வீட்டினுள்ளேயே அடங்கியிருப்பவன் அல்லன்; உண்ணுவது உறங்குவது ஒழிந்த காலமெல்லாம் அவன் மனைப் புறத்திலேயே வாழவேண்டியவளுவன். ஆங்கு, அவன் கண்டும் கேட்டும் மகிழும் ஆடல் பாடல்கள் போலும் இன்ப உணர்வினைத் துரண்டும் நிகழ்ச்சிகள், அவன் இன்பம் நுகர் வேட்சையை வளர்த்தன. அதனல் அவன் வேட்கை முன்னினும் பெருகிற்று; வேட்கையோ வரம்பு காணமாட்டாது வளர்ந்துளது; ஆல்ை இன்ப நுகர்வை மனைவியால் எதிர்பார்த்தலோ இயலாது; அது அறமும் அன்று; அது பிறந்த மகனின் சிறந்த வாழ்வைச் சீரழித்துவிடும்; இந்தியிைல் அவன் செய்வதறியாது திகைத் தான்; இன்பம் நுகர்வேட்கையே அவன் உள்ளத்தில் தலைதுாக்கி நின்றமையால் அவன் அறிவு சிறிது செயலற்றுக் கிடந்தது. அதனுல் அறியாது பிழை புரிந்துவிட்டான்; பரத்தையர் சேரியில், தன் பண்பாட்டிற்கு ஒத்த ஒருத்திபால் காதல் கொண்டு கருத்திழந்து போளுன். அவள் தொடர்பு கொண்டு அவள் மனையிலேயே நிலையாக வாழத் தொடங்கிவிட்டான். -