பக்கம்:குற்றால வளம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

63


 கொண்டு அழிந்தவரையும் மறந்துவிட்ட போதினும் தமது நடை முறையின் பயனைக் கண்டேனும் அழுக்காறுடையார் அதனை யொழித்து உயரலாகாதா? அழுக்காறுடை யானுக்கு ஆக்கமில்லை யென்பதை வள்ளுவனார், பலப்பல இடத்தில் வலியுறுத்துகின்றார், ஒழுக்கத்தைக் கூற வந்தவிடத்து இதனைச் சான்றாகக் காட்டுகின்றார்.


"அழுக்கா றுடையான்கண் ஆக்கம் போன் றில்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு". எனவே ஆக்கம் பெற விரும்புவோர் அழுக்காறாமை கொள்வாராக!


"விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்'.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/72&oldid=1309318" இலிருந்து மீள்விக்கப்பட்டது