பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை வாயு எண்ணெய்க் கிணறுகளில் முக்கியமாக இது வெளிவரும். இதற்குத்தான் இயற்கை வாயு என்று பெயர். இயற்கை வாயு சில சமயங்களில் பூமிக் கடியிலிருந்து தானாகவே வெளிவருவதும் உண்டு. இயற்கை வாயு என்பது பலவித வாயுக்களும் தனிமங்களும் (த.க.) சேர்ந்து உண்டான ஒரு கலவையாகும். கார்பன், ஹைடிரஜன், ஹீலியம், நைட்ரஜன், கார் பன் டையாக்சைடு முதலியன இவற்றில் முக்கியமானவை . இயற்கை வாயு ஒரு சிறந்த எரிபொருள் ஆகும். இவ்வாயு கிடைக்குமிடத்திலிருந்து குழாய்களின் மூலம் இதைத் தொழிற் சாலைகளுக்கு எடுத்துச் சென்று அங்கு எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். கொதிகலன்களைச் சூடேற்றவும், மின் சாரம் உற்பத்தி செய்யவும், உலோகங் களை உருக்கவும் இவ்வாயு பயன்படுகிறது. வீடுகளில் சமையல் அடுப்புகளுக்கும் இவ்வாயுவைப் பயன்படுத்துவதுண்டு. ரசாயனப் பொருள்களையும், மற்றும் பல வகைச் செயற்கைப் பொருள்களையும் செய்ய இயற்கை வாயு பயன்படுகிறது. இவ்வாயுவிலிருந்து சுமார் 2,000 பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றைப் படத்தில் காண லாம். இயற்கை வாயுவைத் திரவமாக மாற்ற முடியும் திரவ நிலைக்கு மாற்றப்பட்ட இயற்கை வாயுவைப் பெட்ரோலுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். மற்ற எரி பொருள்களுக்கு இல்லாத பல சிறப்புத் தன்மைகள் இயற்கை வாயுவுக்கு உண்டு. இயற்கை வாயுவிலிருந்து தயாரிக்கப்படும் சில பொருள்கள் ரேயான் துணி செயற்கைப் பெட்ரோல் M THIINFITTINUT செயற்கை ரப்பர் உரம் இயேசு கிறிஸ்து பூமியிலிருந்து இவ்வாயுவை எடுப்பது எளிது. தானாகவே இது வெளிப்படுவதால் எடுக்கும் செலவும் குறைவு. இவ்வாயு அதிக வெப்பத்தைக் கொடுக்கிறது. எரியும் போது தூசு, புகை, சாம்பல் முதலியவை உண்டாவதில்லை. கால்பந்தில் மிகவும் அழுத்தமான நிலையில் காற்றை அடித்து வைக்கிறோம் அல்லவா? ஆனால் இயற்கை வாயுவை அதைப் போல ஒரு கலத்தில் அதிக அளவில் அழுத்திச் சேகரித்து வைக்க முடியாது. அதனால் தான் கார், ரெயில், கப்பல், விமானம் முதலியவற்றுக்கு இதை எரிபொருளாகப் பயன்படுத்துவதில்லை. இயற்கை வாயு அமெரிக்க ஐக்கிய நாடு களில் மிகுதியாகக் கிடைக்கிறது. கானடா, மத்தியக் கிழக்கு நாடுகள், இந்தியா, ஜப்பான், ருமேனியா, சீனா, ரஷ்யா முதலிய நாடுகளிலும் இது கிடைக்கிறது. பார்க்க : எரிபொருள்கள். இற்கு ஆன்ற ஓரத்தில் தென் தலகேம் குடு" இயேசு கிறிஸ்து : உலகில் உள்ள பெரிய மதங்களில் கிறிஸ்தவ மதமும் (த.க.) ஒன்று. இதை இயேசு கிறிஸ்து தோற்று வித்தார். இம்மதம் இவர் பெயராலேயே வழங்குகிறது. தென்மேற்கு ஆசியாவில் பாலஸ்தீனத் தில் பெத்லகேம் என்ற ஓர் ஊர் உள்ளது. அதில் ஓர் எளிய குடும்பத்தில் இயேசு பிறந்தார். இவர் தந்தை யோசேப்பு; தாய் கன்னி மரியம்மை. இயேசுவின் தந்தை ஒரு தச்சர். இயேசுவும் தம் இளமையில் தச்சு வேலை செய்து வந்தார். தம் வாழ்க்கையில் 30ஆம் வயதில் ஒரு பெரும் மாறுதல் ஏற்பட்டதாக உணர்ந்தார். மக் களைப் பாவங்களினின்றும் காப்பாற்றவே தாம் பிறந்ததாக எண்ணினார். இவ ருடைய உறவினரான யோவான் இவரைப் பற்றி உலகுக்கு அறிமுகம் செய்தார். இயேசு பல இடங்களுக்குச் சென்று மக்களுக்குப் பல உபதேசங்களை வழங்கினார். மக்கள் எல்லா மனிதர்களிடத்திலும் அன் பாக இருக்க வேண்டும்; பிறர் செய்த குற் றங்களை மன்னிக்க வேண்டும் ; தாம் செய்த குற்றங்களைத் தாமே உணர்ந்து திருத்திக்கொள்ள வேண்டும். இந்த நல்ல உபதேசங்களை இயேசு சிறுசிறு கதை களாகச் சொல்லி மக்களுக்கு விளக்கினார். பாவங்களிலிருந்து தம்மை மீட்பதற்கு வந்த ஒருவரே இயேசு என்று யூதர் பலர் நம்பினர். ஏழை மக்களிடம் இயேசுவின் போதனைகள் வெகு வேகமாகப் பரவலா யின. இவருடைய செல்வாக்கும் வளர்ந் தது. இதைக் கண்டு யூத மதத் தலைவர்கள் பொறாமை கொண்டனர். பாவங்களை மன் னிக்கத் தாம் வந்ததாக இயேசு கூறியதை அவர்கள் வெறுத்தார்கள். யூத மதத் தலை வர்கள் இயேசுமீது ஒரு விசாரணை நடத்தி னர். யூத மதத்திற்கு மாறான கருத்துக்களை