பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இஸ்லா பிடிக்கவில்லை. ஆகையால் இஸ்ரவேலுக் கும் அராபியருக்குமிடையே இருபதாண்டு களாகத் தீராத பூசல்களும், போர்களும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இஸ்ரவேல் மிகச் சிறியதொரு நாடு. மண்வளம் இல்லாதது. ஆனாலும் யூதர்கள் கடும் உழைப்பாளர்கள். புதிய காடுகளை வளர்த்தும், பாசனத் திட்டங்களை வகுத் தும் நாட்டைச் செழிப்பாக்கிக்கொண்டு வருகிறார்கள். எல்லாருக்கும் கட்டாய இலவச விவசாயப் பயிற்சி அளிக்கப்படு கிறது. இந்நாடு மத்தியதரைக் கடலையடுத்து அமைந்துள்ளது. கடற்கரைப் பகுதிகள் செழிப்பானவை. நாட்டின் மத்தியில் மலை களும், பீடபூமிகளும் உள்ளன. இதன் பகுதியில் பாலைவனம் பரவியுள்ளது. ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, உருளைக் கிழங்கு, கோதுமை, பார்லி ஆகியவை இந்நாட்டில் விளையும் உணவுப் பொருள் கள். இப்போது ரசாயனத் தொழிற்சாலை கள் பல நடைபெறுகின்றன. வைரத்துக் குப் பட்டை தீட்டுதல் இங்கு நடக்கும் சிறப்பான ஒரு தொழில். இந்நாட்டின் பரப்பு சுமார் 20,000 சதுர கி. மீ. மக்கள் தொகை சுமார் 20 லட்சம் (1960). பழைய தலைநகரம் எருசலேம். புதிய தலைநகரம் டெல் அவீவ். இது ஒரு துறை முகப் பட்டினம். இஸ்லாம் : உலகில் உள்ள பெரிய மதங்களுள் இஸ்லாமும் ஒன்றாகும். இஸ் லாம் என்ற அரபுச் சொல்லுக்கு 'அமைதி பெறும் வழி' என்பது. பொருள். இம் மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயர். உலகம் முழுவதிலும் இம் மதம் பரவியுள்ளது. இம்மதத்தை நிலை நிறுத்தியவர் முகமது நபிகள் நாயகம் ஆவார். இவருக்கு முன்னர் பலர் இஸ் லாம் வழியை மக்களுக்கு விளக்கி வந்த னர். இவர்கள் அனைவருக்கும் நபிகள் என்று பெயர்; பல ஆயிரக்கணக்கான நபி கள் உலகில் பிறந்துள்ளனர். இறுதியாக வந்தவர் முகமது நபி. முகமது நபிகளின் போதனைகள் இஸ்லாமியரின் திருமறை யான திருக் குர் ஆனுக்கு விளக்கமாக அமைந்துள்ளன. இஸ்லாம் மதத்தினர் ஒவ்வொருவருக் கும் ஐந்து கடமைகள் உண்டு அவை : 1. கடவுள் (அல்லாஹ்) ஒருவரே உண்டு என்றும், முகமது நபிகளே அவருடைய தூதுவர் என்றும் நம்புதல் ; 2. நாள் தோறும் ஐந்து முறை ஆண்டவனைத் தொழுதல்; 3. குர் ஆனில் விதித்துள்ள படி ஏழைகளுக்கு ஈதல்; 4. ஆண்டு தோறும் ரமலான் (ரம்சான்) மாதத்தில் பகலில் உண்ணாநோன்பு இருத்தல் ; 5. ஒவ் ம் - வொருவரும் தம் வாழ்நாளில் ஒருமுறை யாவது மக்காவுக்கு யாத்திரை செல் லுதல். முஸ்லிம்கள் உருவமில்லாத கடவுளையே வணங்க வேண்டும். எந்த உருவத்தையும் கடவுளாக வணங்கக் கூடாது. கொலை, களவு, குடி, பொறாமை ஆகிய குற்றங்களை விலக்கவேண்டும்; தொழிலில் நேர்மை தவறக்கூடாது; வட்டி வாங்கக் கூடாது; ஏழை எளியவர்களை ஆதரிக்க வேண்டும். எல்லாரிடத்திலும் அன்பாய் நடந்து கொள்ளவேண்டும். இவை இஸ்லாம் மதத்தின் முக்கிய போதனைகள் ஆகும். ஈ : ஈ மொய்த்த பண்டங்களை நாம் தின்னக்கூடாது. ஏன் தெரியுமா? ஈயினால் தான் பல கொடிய நோய்கள் பரவு கின்றன. ஈக்களில் பலவகை உண்டு. அவை வீட்டு ஈ , மாட்டு ஈ, இறைச்சி ஈ, பழ ஈ, கண் ஈ என்பன. ஆனால் வீட்டு ஈயை மட்டுந் தான் நாம் சாதாரணமாக ஈ என்கிறோம். ஈ பூச்சி இனத்தைச் சேர்ந்தது. பூச்சி களுக்கு நான்கு இறகுகள் இருக்கும். ஆனால் ஈக்கு மட்டும் இரண்டே இறகுகள் உள்ளன. எங்கெல்லாம் அசுத்தம் இருக்கிறதோ அங்கெல்லாம் ஈயையும் காணலாம். சாணம், மலம், குப்பை போன்ற அசுத்தங் களில் ஈ முட்டையிடுகிறது. ஈக்கள் வெகு வேகமாகப் பெருகும். ஈயின் முட்டை கள் 10 நாளில் பொரிக்கும். அவற்றி லிருந்து புழுக்கள் தோன்றும். சில நாளில் இப்புழுக்கள் அசைவற்ற லார்வாக்களாக மாறுகின்றன. இறுதியில் லார்வாக்களி லிருந்து நன்கு வளர்ந்த ஈக்கள் வெளி வருகின்றன. ஈயின் தலை கரியதாக இருக்கும். அதன் இரு பக்கங்களிலும் இரு கண்கள் உள்ளன. இக்கண்களின் அமைப்பு விந்தையானது. ஒவ்வொரு கண்ணிலும் 4,000 சிறு கண் கள் நெருக்கமாகச் சேர்ந்துள்ளன. இத் தகைய கண்களுக்குக் கூட்டுக் கண்கள் என்று பெயர். இக்கண்களினால் தன் உடலின் பின்புறத்திலும் ஈயினால் பார்த் துக்கொள்ள முடியும். ஆனால் இருட்டில் ஈக்களுக்குக் கண் தெரியாது. முட்டை கூட்டுப் புழு ( பியூப்பா ) புழு ( லார்வா )