பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மொழி எண் குறிகள் இந்தோ அராபிய 1 2 3 5 6 8 9 10 தமிழ் க P 值 அ Ꮗ இந்தி 9 १० தெலுங்கு 3 2 60 00 கன்னடம் மலையாளம் 2 வந்த அராபியர்கள் இம்முறையைக் கற் றுச் சென்று அரபுநாடுகளில் கையாண் டார்கள். அங்கிருந்து கி.பி. 700-ல் இம் முறை ஐரோப்பிய நாடுகளில் பரவியது. இந்தியாவிலிருந்து அராபியர்கள் மூலம் ஐரோப்பாவில் பரவியதால் இந்த எண்களை இந்தோ-அராபிய எண்கள் என்று அழைத் தனர். அதுவரை ஐரோப்பாவில் ரோமானிய முறையே பயன்பட்டு வந்தது. தொடக்கத்தில் இந்தோ- அராபிய எண்களைக் கையாள்வதற்கு ஐரோப்பாவில் கடும் எதிர்ப்புக் கிளம் பியது. இது புறச்சமயத்தினரின் கண்டுபிடிப்பு என்றும், இதைக் கிறிஸ்தவ நாடுகளில் பயன்படுத்தக்கூடாதென்றும் சிலர் பிரசாரம் செய்தார்கள். இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் என்னும் ஊரில் இம் முறைக்கு அரசாங்கம் தடை விதித்தது. ஆனால், இந்த முறையின் எளிமையினானும் வசதியினாலும் இது ஒவ்வொரு நாடாகப் பரவியது. இன்று உலகம் முழுவதிலும் இந்தோ-அராபிய எண்களே பயன்படுத் தப்பட்டு வருகின்றன. 145456788 அராபிய எண்குறிகளின் முன்னைய வடிவம் ஒவ்வொரு குறியும் அது குறிக்கும் எண்ணிக்கையுள்ள கோடுகளைக் கொண்டிருப்பதைக் காணலாம். தமிழ்நாட்டில் பண்டைக் காலத்தி லேயே எண்களைக் குறிக்கத் தனி எழுத்து கனைப் பயன்படுத்தி வந்தார்கள், தமிழ் நாட்டிலுள்ள சாசனங்களில் எண் குறி கள் எட்டாம் நூற்றண்டின் நடுவிலிருந்து கிடைக்கின்றன. எனினும், அதற்குமுன் ஆண்ட பல்லவர் முதலியோருடைய சாசனங்களிலிருந்தும் இவற்றின் வளர்ச் சியை ஓரளவு அறிய முடிகிறது. தமிழ் நாட்டு எண்களில் ஒன்றுக்கு மேற் பட்ட ஸ்தானங்களை யுடையவற்றுள் பத்து (ய), நூறு (ள), ஆயிரம் (த) ஆகியவற் றுக்குத் தனிக்குறிகள் உண்டு. 20,200, 2000 ஆகியவற்றை முறையே உய,உள, உத என்று எழுதுவர். 2,495 என்பதைத் தமிழில் உ சூ சாகூயரு என்று எழுதி வந்தார்கள். தமிழ் நாட்டுச் சாசனங்களில் 2 ୭ கால், அரை, முக்கால் போன்ற பின்னங் களுக்கும் தனி எண்குறிகள் உண்டு. காணி, அரைக்காணி, முந்திரி போன்ற கீழ்வாய் இலக்கங்களுக்கும் குறிகள் இருந் தன. இன்று சர்வதேச எண்களான இந்தோ-அராபிய எண்களே எல்லா நாடு களிலும் பயன்படுத்தப்படுவதால், தமிழ் எண்கள் மிக அரிதாகவே பயன்படுகின் றன. எதிரொலி: ஒரு பெரிய மண்டபத் தில் நின்றுகொண்டு நாம் குரல் எழுப்பினால், சிறிது நேரத்தில் நம் குரலின் ஒலியை நாமே திரும்பக் கேட்கலாம். இப்படித் திரும்பக் கேட்கும் ஒளிதான் எதிரொலி ஆகும். ஒரு பந்தைச் சுவரின்மேல் எறிந்தால், அது சுவரில் மோதி நம்மை நோக்கித் திரும்பி வருகிறது. அதேபோல் ஒலி அலை கள் எதிரிலுள்ள கடினமான சமதளப் பரப்பில் மோதும்பொழுது, அவற்றின் போக்கு தடைபட்டு, அவை வந்த வழியே திரும்புகின்றன. இதனால் எதிரொலி தோன்றுகிறது. பெரிய கட்டடங்களிலும், மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்குசுனிலும், குகைகளிலும் எதிரொலி அதிகமாக உண் டாகும். ஒலியைவிட எதிரொலிக்கு வலிமை குறைவு. எதிரொலி மீண்டும் இன்னொரு பொருளின் மீது மோதித் திரும்பவும் எதிரொலிக்கும். இவ்வாறு சில மலை இடுக்கு களின் இடையே ஒலி பலமுறை எதிரொளிக்கப்படுவதால் பல எதிரொலி கள் தொடர்ந்து கேட்கும். சில சமயம் இடியோசை தொடர்ந்து நெடுநேரம் முழங்குவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஒரு முறை உண்டாகும் இடியோசை பல மேகங்களில் மோதி மீண்டும் மீண்டும் பிரதிபலித்துப் பல எதிரொளிகளை எழுப் புவதே இதற்குக் காரணமாகும். இத்தாலி நாட்டிலுள்ள மிலான் நகரிலிருக்கும் ஒரு பழைய அரண்மனையில் ஓர் ஒலி தடவைகளுக்கு மேல் எதிரொலிக்குமாம்! பிரிட்டனில் ஸ்காட்லாந்துக்கு அருகிலிருக் கும் ஸ்டாபா என்ற தீவிலுள்ள பிங்கல் 50