பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்து எழுத்து: பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த மக்களுக்கு எழுதத் தெரியாது. ஏனென்றால் அப்போது எழுத் துகளே இல்லை. ஒரு மரத்தைக் குறிக்க அவர்கள் மரத்தின் படத்தையே வரைந்து காட்டுவார்கள். அணிலைக் குறிக்க. அணிலைப் போல் ஓர் உருவம் வரைந்து காட்டுவார்கள். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திலும் மெசப்பொட்டேமியா விலும் வாழ்ந்துவந்த மக்கள் இப்படித் தான் செய்வது வழக்கம். அவர்கள் வரைந்த இந்த உருவங்களுக்குப் 'பட எழுத்துக்கள்' என்று பெயர். எகிப்தில் உள்ள பழங்கால மன்னர்களின் சமாதிகளில் பட எழுத்துக்களை இன்றும் காணலாம். பருந்து கன்று பட எழுத்துகள் TOTAL தோட்டம் பட எழுத்துகள் எழுதுவதில் பல தொல்லைகள் உண்டு. அவற்றை எழுத அதிக இடம் வேண்டும்; அதிக நேரமும் வேண்டும். மக்கள் தினமும் ஆயிரக்கணக் கான சொற்களைப் பேசுகின்றனர். அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு படம் எழுத முடியுமா? மேலும், ஒவ்வொரு ஊரிலும் பட எழுத்துகள் எழுதக் கற்றவர்கள் சிலர் தான் இருப்பர். இந்தக் காரணங்களினால் அறிவு பரவுவதற்குப் பட எழுத்துக்கள் உதவியாக இல்லை. காலப்போக்கில், பட எழுத்துகளி லிருந்து 'குறி எழுத்துகள்' பிறந்தன. 'மரம்' என்ற சொல்லைக் குறிப்பதற்கு மரத்தைப் போலப் படம் ஒன்றை வரை யாமல் ஏதேனும் குறி ஒன்றை எழுதுவது வழக்கமாயிற்று. பேச்சில் வரும் ஆயிரக் கணக்கான சொற்களுக்கு ஆயிரக்கணக் கான குறிகள் எழுதப்பட்டன. பழங் காலத்தில் வாழ்ந்த பாபிலோனியரும், அசிரியரும் எழுதியவை குறியெழுத்து களே. அவர்கள் எழுதிய குறியெழுத்து இங்குள்ள பட எழுத்துக்களின் தொகுதி,51 வேடர்கள் 5 படகுகளில் ஏறி 3 நாட்களில் ஓர் ஏரியைக் கடந்தனர் என்ற செய்தியைத் தெரிவிக் கிறது. குதிரையில் அமர்ந்து செல்பவன் அவர்க ளுடைய தலைவன். 3 நாட்கள் ஆயின என்பதை வானவில்லின் கீழ்ச் சூரியனின் உருவத்தை மூன்று முறை வரைந்து காட்டியுள்ளனர். 65 கள் உளிவெட்டுகள் போலக் காணப்பட் டன. ஆதலால் அவற்றுக்கு உளிவெட்டு எழுத்துகள்' என்று பெயர் வழங்குகிறது. சீனமொழி எழுத்துகள் குறியெழுத்து களேயாகும். அம்மொழியில் 50,000 குறி யெழுத்துக்களுக்குமேல் உள்ளன. 海 சீன எழுத்துக்கள் குறியெழுத்துக்களைக் கற்பதும், எழுது வதும் எளிதல்ல, ஆதலால், ஒரு சொல் லில் உள்ள ஒலிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறியை எழுதும் வழக்கம் டாயிற்று. அதாவது, 'மரம்' என்ற சொல்லில் ம-ர-ம் என்ற மூன்று ஒலிகள் பிறக்கின்றன அல்லவா? அந்த ஒலிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறி ஏற்பட்டது. இதையே இப்போது நாம் 'எழுத்து' என் கின்றோம். உல மேல்நாட்டில் முதன் முதல் எழுத்துகளை எழுதக் கற்றுக்கொண்டவர்கள் பினீசியர் கள் இவர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு சிரியாவில் வாழ்ந்தவர்கன். கெங்கும் இவர்கள் கடல் வாணிகம் செய்து வந்தனர். இவர்களிடமிருந்து கிரேக்கர்கள் எழுத்துகளைக் கற்றுக்கொண்டார்கள். கிரேக்கர்கள் அந்த எழுத்துகளை ரோமானி யருக்குக் கற்றுக் கொடுத்தனர். ரோமா னியரின் லத்தீன் எழுத்துகள் கிரேக்க மிடமிருந்து வந்தவையே. இந்த லத்தீன் எழுத்துக்களிலிருந்துதான் ஆங்கிலம், பிரெஞ்சு முதலான ஐரோப்பிய மொழி களின் எழுத்துகள் பிறந்தன. இப்போது ஐரோப்பிய மொழிகள் எதிலும் முப்பதுக்கு மேற்பட்ட எழுத்து கள் கிடையா. ஆங்கிலத்தில் 26 எழுத் துகளே உள்ளன. அவற்றுள் 5 உயிர் எழுத்துக்கள்; மற்றவை மெய்யெழுத்துகள். மெய்யெழுத்தை அடுத்து உயிர் எழுத்தை எழுதி உயிர்மெய்யெழுத்தை உண்டாக்கு கின்றனர். ஐரோப்பிய மொழிகளில் பெரிய குறை ஒன்று உண்டு. பெரும்பாலான சொற் களில் உள்ள எழுத்துகளின் ஒலிகள் ஒரு வகையாக இருக்கும். ஆனால் அச்சொற் கனின் உச்சரிப்பு வேறு மாதிரியாக இருக் கும். இக்காரணத்தால் ஐரோப்பிய மொழிகளின் சொல் உச்சரிப்பைக் கற்றுக் கொள்வது எளிதன்று. இந்தியாவில் பேசும் பெரிய மொழிகள் யாவும் இரு மொழிக் குடும்பங்களுள் அடங்கும். ஒன்று இந்தோ-ஆசிய மொழிக் குடும்பம்; இதன் ஆதிமொழி சமஸ் கிருதம். மற்றொன்று திராவிட மொழிக் குடும்பம். இதன் ஆதிமொழி தமிழ்.