பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

84 மயில் மயில் - மரங்கள் வால் மயில்: மயில் மிக அழகான பறவை. இது தன் நீண்ட தோகையை விரித்து ஆடும்போது பார்க்க மிக அழகாக இருக் கும். இந்தத் தோகை, மயிலின் அல்ல; முதுகிலிருந்து நீண்டு வளரும் சிறகுகளே. ஒவ்வொரு சிறகின் நுனியிலும் கருப்பு, நீலம், பச்சை நிறங்கொண்ட சிறிய வட்டம் அழகான இதைக் கண் என்று சொல்வார்கள். மயில் மகிழ்ச்சி அடையும்போது இந்த அழகிய தோகையை விசிறிபோல விரித்து ஆடும். ஆண் மயிலுக்குத்தான் தோகை உண்டு: பெண் மயிலுக்கு இல்லை. அடர்ந்த புதர்க் காடுகளிலும் மலைச் சாரல்களிலும் மயில்கள் சிறு கூட்டமாக வாழும். தானியங்கள், பூச்சி, பல்லி, சிறு பாம்பு முதலியன மயிலின் உணவு. உயர்ந்த மரக்கிளைகளில் தங்கி இது இரவைக் கழிக்கும். இதற்கு மிகக் கூரிய பார்வை உண்டு. பகைவர்கள் வருவதைத் தொலைவிலிருந்தே கண்டு ஓடி ஒளியும். மயில்களால் அதிக உயரம் பறக்க முடியாது. ஆனால் இவை வேகமாக ஓடும். மயில் தீண்ட ஓசையிட்டு அகவும். மயில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். " ஒவ்வொரு நாட்டிலும் அங்கேயே சிறப் பாசு வாழும் ஒருசில பறவைகள் இருக் கும். அவற்றில் ஒன்றை அந்த நாடு தன் தேசியப் பறவையாகக் கொள்வது வழக் சும். இந்தியாவின் தேசியப் பறவை மயில் ஆகும். முருகக் கடவுளின் வாகனமாகவும் மயில் போற்றப்படுகிறது. மயிலின் தோகைக்காக இதை வேட் டையாடுகிறார்கள். அதனால் இதன் எண்ணிக்கை குறைத்துவருகிறது. இவ்வளவு அழகான பறவையை நாம் போற்றிப் பாதுகாக்கவேண்டும். மரங்கள்: மா, பலா, தென்னை, பனை முதலிய பல மரங்களை நீங்கள் அறிவீர்கள். தாவரங்களின் ஒரு பிரிவே மரங்கள் ஆகும். இருக்கும். மரம் சுமார் மூன்று மீட்டர் உயரமும் அதற்கு மேலும் இருக் கும். மரத்திற்கு ஒரே தண்டு அல்லது அடிமரந்தான் உண்டு. ஆனால் செடிகள் மூன்றுமீட்டர் உயரத்திற்கும் குறை வாகவே வனரும். இவற்றிற்குப் பல தண்டுகள் இருக்கும். இதுவே மரத்திற்கும், செடிக்குமிடையே உள்ள முக்கிய வேறு பாடாகும். மயிலின் தலையில் கருமையும் நீலப் பச்சையும் கலந்த அழகிய குஞ்சம் உண்டு. மயிலின் தலையும் கழுத்தும் பளபளப்பான நீலநிறமாக இருக்கும். உடலில் நீலம், பச்சை, கருப்பு, இளஞ்சிவப்பு போன்ற பல நிறங்கள் கலந்து அழகாக அமைந்திருக் கும். பெண்மயிறுக்கு இவ்வளவு அழகு இல்லை. முழுவதும் வெள்ளை நிறமுடைய யில்களும் சில உண்டு. இந்தியா, இலங்கை, பர்மா, மலேசியா ஆசிய நாடுகளில் மவில் வாழ்கிறது. எனினும் இந்தியாவில்தான் இது நன்றாகப் பெருகி வளருகிறது. இந்தியாவே இதன் தாயகம் எனக் கூறலாம். மயிலின் அழகுக் காக உலகின் பல நாடுகளில் இதைப் பூங்காக்களிலும் விலங்குக் காட்சிசாலை களிலும் வளர்க்கிறார்கள். இந்தியாவில் கோயில்களிலும் வீடுகளிலும் இதை வளர்க் கின்றனர். பர்மா, ஜப்பான், ஜாவா ஆகிய பகுதிகளில் வாழும் ஒரு வகை மயிலுக்குக் கழுத்தும் மார்பும் பளபளப்பான பச்சை நிறமாக இருக்கும். மரங்களில் முக்கியமாக மூன்று பகுதி களைக் காணலாம். தரைக்கு அடியில் வேர்ப் பகுதியும், பூமியிலிருந்து எழும் ஒரே தனியான அடிமரமும் (Trunk), அடிமரத்தின் உச்சியில் பல கிளைகளும், சிறு கிளைகளும் இக்கிலைகளில் இலைகளும் இருக்கும். தரைக்கடியிலுள்ள வேர்கள் கிளைத்துப் பெருகிப் பரவலாகச் செல்லும். சிலவகை மரங்களுக்குப் பெரிய ஆணிவேர் இருக் ஆ கும். இவ்வேர்களின் உதவியினாலேயே மரம் நேராக நிமிர்ந்து நிற்க முடிகிறது. தரைக்கடியிலிருந்து நீரையும், தாது உப்பு களின் கரைசலையும் வேர்கள் உறிஞ்சி மேலே அனுப்புகின்றன. அடிமரத்தின் வழியாகவே நீரும், தாது உப்புக் கரைசல் களும் இலைகளுக்குச் செல்கின்றன. இலை கள் தயாரிக்கும் உணவில் ஒரு பகுதி அடி மரத்தில் சேமித்து வைக்கப்படுகிறது.