பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மருத்துவம் பயன்படுத்தினார்கள். உடல் உறுப்புகளை நீக்குதல், கண்ணில் விழும் படலத்தை (Cataract) அகற்றுதல், தோல் இணைப்பு (Plastic Surgery) போன்ற மிக நுட்பமான சிகிச்சைகளைக்கூட அவர்கள் அன்று செய்தனர். மாந்திரீகமும் அவர்களுடைய மருத்துவத்தில் முக்கிய இடம் பெற் றிருந்தது. இன்றைய மேல்நாட்டு மருத்துவத்தின் தந்தை எனக் கருதப்படுபவர் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹிப்பாக்கிரட்டீஸ் (Hippocrates) என்ற கிரேக்கர் ஆவார். ஒவ்வொரு நோய்க்கும் இயற்கையான காரணங்கள் உண்டென்று அவர் கண்டறிந் தார். சமயத்திலிருந்து மருத்துவத்தை அவர் தனியாகப் பிரித்தார். உடல் அமைப்பையும், உடல் உறுப்புகள் இயங்கும் விதத்தையும் கண்டறிந்ததும் மருத்துவம் வேகமாக வளர்ந்தது. உடலில் இரத்த ஓட்டம் இடைவிடாமல் நடை பெறுவதை 17ஆம் நூற்றாண்டில் வில்லியம் ஹார்வி (William Harvey} என்பவர் கண்டுபிடித்தார். மருத்துவர் கள் துணிவுடன் பல சோதனைகளைச் செய்து நோய்களைக் குணப்படுத்தும் புதிய முறைகளை அறிந்தனர். மிகச் சிறிய பொருள்களையும் பெரிதாக்கிக் காட்டும் மைக்ராஸ்கோப் கருவி கண்டுபிடிக்கப் பட்டதும், உடல் திசுக்களையும். உடலுறுப்புகளையும் ஆராய்ந்தறிய முடிந் தது. பெரும்பாலான நோய்கள், மிக நுண்ணிய நோய்க் கிருமிகளினால் (த.க.) உண்டாவதாகப் பாஸ்ட்டர் (Louis Pasteur, த.க.) என்னும் பிரெஞ்சு விஞ்ஞானி 1860ஆம் ஆண்டில் கண்டுபிடித்தது மருத் புற்றுநோய்ச் சிகிச்சைக்கான அணுசக்தி எந்திரம் எக்ஸ்-கதிர் போட்டோ எடுக்க உதவும் எந்திரம் பட்டம் 89 துவத் துறையில் ஏற்பட்ட மற்றொரு முக்கிய முன்னேற்றமாகும். ரன்ட்கன் என்ற ஜெர்மானியர் 1895-ல் எக்ஸ்-கதிர் களைக் (த.க.) கண்டுபிடித்தார். இதன் மூலம் உடலினுள் உள்ள எலும்புகளையும், உள்ளுறுப்புகளையும் படம் எடுக்கலாம். இதைக் கொண்டு உள்ளுறுப்புகளில் உண்டாகும் நோய்களுக்குச் சிகிச்சை யளிக்க முடிகிறது. இன்னும் இதுபோன்ற பல புதிய மருத்துவ முறைகளை மருத் துவர்களும் விஞ்ஞானிகளும் கண்டு பிடித்து வருகிறர்கள். நைட்டிங்கேல் (த.க.) அம்மையாருக்குப் பிறகு மருத்துவ தாதியரும் (Nurses) மருத்துவத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளனர். மருத்துவத்தில் பெற்றவர் களே இன்று மருத்துவத் தொழில் நடத்த அனுமதிக்கப்படுகிறார்கன். இதற்கு மருத் துவக் கல்லூரிகள் உள்ளன. கண், பல், இதயம் முதலிய பல்வேறு உறுப்புகளி லும் உண்டாகும் நோய்களைக் குணப் படுத்த இன்று தனித்தனியே மருத்துவ வல்லுநர்கள் அதுபோல் சயரோகம் போன்ற ஒவ்வொரு நோயை யும் குணப்படுத்தத் தனி வல்லுநர்கள் உள்ளனர். அறுவை சிகிச்சையில் தனித் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களும் உள்ள னர். குழந்தைகளுக்குச் சிகிச்சை செய்வதற்கேற்ற தளித்திறனமயுள்ள மருத்துவர்களும் இன்று இருக்கிறார்கள். பழங்காலத்திலேயே இந்தியர்கள் பல வகை மருத்துவமுறைகளை அறிந்திருந்தார் கள். தமிழ்நாட்டில் சித்தர்கள் பலர் மருத் துளத்தில் தேர்த்திருந்தனர். அவர்கள் வகுத்த மருத்துவமுறை சித்த மருத்துவம் எனப்படும். உலோகங்களையும், பாதரசத் உள்ளனர்.