பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மல்லிகை - மலர் மருந்துகளில் உள்ள ரசாயனப் பொருள் கள் எவை என விஞ்ஞானிகள் கண் டறிந்து இன்று செயற்கை முறையில் அவற்றை உற்பத்தி செய்கிறார்கள். தாவரங்களிலிருந்தும். விலங்குகளிலிருந் தும் பெறப்படும் சில மருந்துகளும் செயற்கை முறையில் தயாரிக்கப்படுகின் றன. 'சல்பா' மருந்துகளும், ஊட்டக் குறைவினாய் உண்டாகும் நோய்களுக்கு பயன்படும் வைட்டமின்களும் செயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. பெளிசிலின் (த.க.) போன்ற மருந்துகள் நோயை உண்டாக்கும் கிருமிகளை அழித்து' நோயைக் குணப்படுத்தும். இலை தவிர. பாதரசத்திலிருந்து கலிம்பும். அயோடின் போன்ற மருந்துகளும் தாதுப்பொருள்களி லிருந்து கிடைப்பவையாகும். சிலவகை மருந்துகளை அளவுக்குமீறி உட்கொண்டால் நச்சுத் தன்மை மிகுந்து தீங்கு உண்டாகும். சில மருந்துகள் சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. இதை அவெர்ஜி (ந.க.) என்பார்கள். பார்க்க: மயக்க மருந்துகள். மல்லிகை : நல்ல மணமுள்ள மலர் களில் ஒன்று மல்லிகை. இதன் தூய வெண்மை நிறம் கண்ணைக் கவரக்கூடியது. இதன் நறுமணம் உள்ளத்திற்கு இன்பம் அளிக்கவல்லது. கொடியாகவோ நிமிர்ந்து நிற்கும் சிறு செடியாகவோ மல்லிகை வளரும். இதன் பூக்கள் பெரும்பாலும் வெண்மை நிறமாக இருக்கும். சிலவற்றின் இதழ்களின் அடிப் புறம் செம்மை கலந்திருக்கும். மஞ்சள் நிறத்தில் பூக்கும் மல்லிகையும் உண்டு. மல்லிகை வெப்பப்பகுதிகளில் நன்கு வளரும். இந்தியா, சீனா, பர்மா முதலிய ஆசிய நாடுகளில்தான் இது முதளில் தோன்றியது. பிறகு ஆப்பிரிக்கா, ஐரோப் பாக் கண்டங்களின் வெப்பப் பகுதிகளுக்கு இதுகொண்டு செல்லப்பட்டுப் பயிரிடப் பட்டு வருகிறது. பதியம், நறுக்கு ஆகிய முறைகளால் மல்லிகையைப் பயிரிஓகிறார் கள். மல்லிகையில் இருநூற்றுக்கு மேற்பட்ட இனங்கள் உள்ளன. பாரிசாதம் எனப் படும் பவள மல்லிகையும், ஒலிவ மரமும் மல்லிகைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அந்தி மல்லினசு, மர மல்லிகை என்னும் தாவரங்களின் பெயரில் மல்லிகை என்ற சொல் இருப்பினும் அவை மல்லிகைக் குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல. மல்லிகைப் பூவிலிருந்து வாசனைத் திரவியம் எடுக்கிறார்கன். சோப்புகளுக்கு மணம் கொடுக்கவும் மல்லிகையைப் பயன் படுத்துகிறார்கள். சீனாவில் மணத்துக்காகத் 91 தேயிலையுடன் மல்லிகையைக் கலந்து தேநீர் தயாரிக்கிறர்கள். மலர்: அழகும் மணமும் கொண்ட தாமரை. மல்லியசு, ரோஜா, சாமத்தி, அல்லி, கனகாம்பரம் முதலிய பல மலர்களை நாம் பார்க்கிறோம். செடிகளிலும், கொடிகளிலும் மரங்களிலும் பலவகை யான மலர்கள் பூக்கின்றன. இவை பல் வேறு நிறங்களிலும், வெவ்வேறு வடிவங் களிலும் அமைந்துள்ளன. பாசி போன்ற சில தாவரத்தின் பூக்கள் மிக நுண்ணியவை. சிறிய உருவத்தைப் பெரிதாக்கிக் காட்டும் மைக்ராஸ்கோப் (த.க.) என்னும் கருவி யினாலேயே இவற்றைப் பார்க்கலாம். உலகிலேயே மிகப்பெரிய மலராகிய ராப் லீசியாவின் குறுக்களவு ஒரு மீட்டருக்கும் அதிகமாக இருக்கும். உலகிலுள்ள தாவரங்களில் பெரும் பாலானவை பூக்குந்தாவரங்களாகும். இவற்றில் தோன்றும் மலர்கள் தாவரங் களுக்கு மிகவும் இன்றியமையாதவை. மலரில்தான் விதைகள் உண்டாகின்றன. விதைகளினால்தான் தாவரத்தின் இனம் பெருகுகிறது. பார்க்க : தாவரங்கள். ஊமத்தை, நெருஞ்சி, அவரை, பூவரசு இவற்றின் மஸர்களைக் கொண்டு மலரின் பல்வேறு உறுப்புகளைத் தெரிந்துகொள்ள லாம். ஒவ்வொரு மலரிலும் புல்லி அல்லது புறவிதழ் (Sepal), அல்லி அல்லது அகவிதழ் (Petal), கேசரங்கள் (Stamens). சூலகம் (Pistil) என்ற நான்கு முக்கிய உறுப்புகள் உள்ளன. கேசரங்களில் மகரந் தத் தூள்கள் நிறைந்திருக்கும். சூலகங் களில் சூல்கள் (Ovules) என்னும் நுண்ணிய உறுப்புகள் உண்டு. மகரந் தத்தூள் இவற்றில் சேருகின்றபொழுது இவை விதைகளாக முதிர்கின்றன. இவ்விதம் உண்டாகிய விதை முதிர்ந்து முற்றிப் பிறகு மண்ணில் விழுந்து முனைத் துத் தனித் தாவரமாக வளரும். முழுதும் மலராமல் மொட்டாக இருக்கை யில், அதன் முக்கிய உறுப்புகளைப் பாது காக்கப் புறவிதழ் உதவுகிறது. அகவிதழில் ஒருவகைத் தேன் இருக்கும். தேனை நாடி வரும் பூச்சிகளை மணத்தாலும் நிறத் தாலும் மலரிடம் கவர்ந்து இழுப்பது அகவிதழேயாகும். பூ சில மலர்களில் சூலகம், கேசரம் ஆகிய இரண்டும் சேர்ந்திருக்கும். ஊமத்தை. நெருஞ்சி, பூவரசு, கொன்றை, நெல் முதலியவை இவ்வகையைச் சேர்ந்தவை. சில மலர்களில் கேசரம் அல்லது சூலகம் என்ற உறுப்பு மட்டும் இருக்கும். பரங்கி, பூசணி, புடல், பீர்க்கு முதலிய செடி களின் சில பூக்களில் கேசரங்கள் மட்டும்