பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மயிலுக்குப் போர்வை


இயற்கை அழகினைக் கண்டுகண்டு-பெரும்
இன்ப மடைந்திடும் ஓர் அரசன்,
உயர்ந்த மலைகளைக் கண்டிடவே-மிக
உல்லாச மாகக் கிளம்பினனே.

மலைவளம் கண்டு வருகையிலே-அங்கு
மடமட வென்று மழைபொழிய,
பலகிளை உள்ள மரத்தடியில்-சென்று
பதுங்கினன் அந்த அரசனுமே.

பயத்தால் உடலும் நடுங்குதல்போல்-குளிர்
பரவிட மன்னன் நடுங்கினனே.
உயர்ந்த மதிப்புள்ள போர்வையினால்-நன்றாய்
உடம்பை இறுகவே மூடினனே.

மேகங்கள் கூடிடக் கண்ட துமே-அங்கு
வேகமாய் ஓர்மயில் ஓடிவந்தே,
தோகை விரித்துநின் றாடியதே-மேலும்
தொண்டையைத் தூக்கி அகவியதே !

107