பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எத்திசையும் சுற்றிக் காற்றொருநாள் - அங்கு,
எமனைப் போலவே வந்ததடா !
எத்தனை யோஉயிர் மாண்டிடவே - மிக்க
இன்னல் புரிந்துமே சென்றதடா !

எண்ணரும் உயிர்கள் எத்தனையோ - அதில்
இன்புற்ற வாழ்வினை நீத்தனவே.
கண்ணினைப் போன்றநம் ஆலமரம் - அந்தக்
கணக்கில் ஒன்றெனச் சேர்ந்ததுவே !

வேரற்று அம்மரம் வீழ்ந்ததுவே - பெரும்
வீரனைப் போலக் கிடந்ததுவே.
ஊரினர் யாவரும் கூடிவந்தே - அதன்
உன்னத நன்மையைப் பேசினரே.

அத்தனை மக்களும் வாடினரே - ‘இது
ஐயோ, போனது !’ என்றனரே.
இத்தலம் விட்டே போய்விடினும் - அது
எல்லார் உள்ளத்தும் நின்றதுவே !

88