பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடனே காகம் அருகில் சென்றே
உற்றுநன்றாய்ப் பார்த்த பின்னர்,
"அடடே இந்தக் காவல் காரர்
யாரோஎன்று நினைத்திருந்தேன்.

வைக்கோல் மேலே துணியைச் சுற்றி
வைத்தி ருக்கும் பொம்மைஎன்றே
இக்க ணத்தே நண்பர் அறிய
எடுத்துச் சொல்வேன்"என்றுகூறி,

காவல் காக்கும் பொம்மை தலையில்
காலை வைத்து நின்றுகொண்டு,
கூவி அழைத்துப் பறவை யாவும்
கூடச் செய்து விட்ட தங்கே!


51