இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆடலும் பாடலும்
25
உருண்டையாக இருக்கும் விளையாட்டு வஸ்துவைக் குழந்தைக்கு முன்னலே ஆட்டி வேடிக்கை காட்டுவாள் தாய். அப்போது ஒரு பாட்டு வரும்.
- பம்புக்கா பம்புலாலா
- பம்புக்கா பம்புச்செடி
- பம்புக்கா பம்புப் பழம்
- பம்புக்கா பம்புக் கிச்சடி
- பம்புக்கா பம்புலாலா !
தலையை வாரிப் பின்னும்போது தாய் பாட்டுப் பாடுகிறாள். பேனை அழைத்து “இந்த மகராஜன் தலையிலே வந்திறங்கு” என்று பாடுகிறாள். குழந்தையின் கவனத்தை இழுப்பதற்காக அவள் “பேனைப் பெருமா”ளாக்கிப் பாடுகிறாள்.
- கொட்டுக் கொட்டுப் பேனே
- கோடாலிப் பேனே
- மத்து மத்துப் பேனே
- மகராஜன் தலையில் வந்திறங்கு!
குழந்தை சோற்றால் வளர்கிறது என்று சொல்வதைக் காட்டிலும் பாட்டால் வளர்கிறது என்று சொல்லும்படி இருக்கின்றன, தமிழ் நாட்டில் வழங்கும் இத்தகைய பாடல்கள்.