பஞ்சாமிர்தம்
63
நெற்றியின் வியர்வை - நிதமும்
நிலத்தில் வீழ்ந்திடிலே
சற்றும் வாடாமல் - சுதந்திரம்
தழைத்து வருமப்பா!
3
ஜாதிச் சண்டையெலாம் - ஓய்ந்து
தணிய வேண்டுமப்பா!
நீதி நாடெங்கும் - நிலைத்து
நிற்க வேண்டுமப்பா!
4
உலக மக்களெலாம் - அன்பொடு
ஒருதாய் மக்களைப்போல்
கலக மின்றிவாழும் - காலம்
காண வேண்டுமப்பா!
5
57. நாட்டுக்கே உழைப்போம்
நெற்றி வியர்வை நிலத்தில் விழஉழைப்போம்;
பெற்ற சுதந்திரத்தைப் பேணுவோம்; சுற்றமெனப்
பன்னாட்டு மக்களையும் பாராட்டிப் பாரதமா
நன்னாட்டில் வாழுவோம் நாம்.
1
பத்தியொடு தெய்வம் பணிந்திடுவோம்; பாரதத்தாய்
சித்தம் களிப்படையச் செய்திடுவோம்; ஒத்துழைத்துப்
பெற்ற சுதந்திரத்தைப் பேணிடுவோம்; பேருலகில்
நற்றவம் ஈதால் நமக்கு.
2
வாணிகம் செய்வோம்; வயலிற் பயிர் செய்வோம் :
காணரிய கைத்தொழிலும் கண்டு செய்வோம்; பேணிநம்
சந்தத் தமிழ்வளர்ப்போம்; தாய் நாட்டுக்கே உழைப்போம்;
சிந்தை மகிழ்ந்து தினம்.
3