இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இலக்கியத்தில் கெடிலம்
101
- “வழிந்திழி மதுகர மிழற்ற மந்திகள்
- கிழிந்ததேன் நுகர்தருங் கெடில வாணரே.”
- "ஈண்டுநீர்க் கமலவாய் மேதி பாய்தரக்
- கீண்டுதேன் சொரிதருங் கெடில வாணரே.’’
நான்காம் பதிகம்
- “வண்டு கொப்பளித்த தீந்தேன்
- வரிக்கயல் பருகி மாந்தக்
- கெண்டைகொப் பளித்த தெண்ணீர்க்
- கெடில வீரட்டனாரே"
ஏழாம் பதிகம்
- “கெடில வேலி அதிகை வீரட்டனாரே"
எட்டாம் பதிகம்
- “....பழனஞ்சேர் கழனித் தெங்கின்
- மடலைநீர் கிழியவோடி அதனிடை மணிகள் சிந்தும்
- கெடில வீரட்டமேய கிளர்சடை முடியனாரே.’’
- “கந்திரம் முரலுஞ் சோலைக் கானலங் கெடிலத்தாரே.”
ஒன்பதாம் பதிகம்
- “மாசிலொள் வாள்போல் மறியும் மணிநீர்த் திரைத்தொகுதி
- ஊசலை யாடியங் கொண்சிறை அன்னம் உறங்கலுற்றால்
- பாசறை நீலம் பருகிய வண்டுபண் பாடல்கண்டு
- வீசுங் கெடில வடகரைத்தே எங்கள் வீரட்டமே”
- "பைங்கால் தவளை பறைகொட்டப் பாசிலை நீர்ப்படுப்பர்
- அங்காற் குவளைமேல் ஆவி உயிர்ப்ப அருகுலவும்
- செங்காற் குருகிவை சேருஞ் செறிகெடிலக் கரைத்தே’’
- "அம்மலர்க் கண்ணியர் அஞ்சனம் செந்துவர் வாயிளையார்
- வெம்முலைச் சாந்தம் விலைபெறு மாலை யெடுத்தவர்கள்
- தம்மருங் கிரங்கார் தடந்தோள் மெலியக் குடைவார்
- விம்மு புனற்கெடிலக் கரைத்தே எந்தை வீரட்டமே.”
- “தூய தெண்ணீர்க் கெடிலக்கரைத் திருவீரட்டராவர்”