பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் கெடிலம்

103



“சிறையார் புனற்கெடில வீரட்டமும்”
“செழுநீர்ப் புனற்கெடில வீரட்டமும்”
“தேனார் புனற்கெடில வீரட்டமும்”
"திருநீர்ப் புனற்கெடில வீரட்டமும்”

இவை அப்பர் தேவாரப் பாடற் பகுதிகள்.

கெடிலக் கரையிலே பிறந்து கெடிலக் கரையிலே வளர்ந்து கெடிலக் கரையிலே உருவான நாவுக்கரசர் தம் தாய்த்திரு கெடிலத்தை ஆவல் தீரப் போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார். “கெடிலம் தென்திசைக் கங்கையாம். கெடிலம் பொன் கொழிக்கிறதாம். கெடிலத்தில் வண்டுகள் மிழற்றுகின்றன; எருமைகள் பாய்கின்றன; மலர்கள் தேன் சொரிகின்றன; மந்திகள் தேன் நுகர்கின்றன: கயல் மீன்களும் தேன் மாந்துகின்றன; கெண்டைகள் தேன் கொப்பளிக்கின்றன. ஊருக்கு வேலிபோல் உள்ளது கெடிலம், கரைகளில் சோலைகள் சூழ்ந்துள்ளன; தெங்கின் முற்றிய மணிகள் நீரில் சிந்துகின்றன; ஒள்ளிய வெள்ளிய வாள்போல் நீரில் அலைகள் எழுகின்றன; அந்த அலைகளில் அன்னங்கள் ஊசல் (தொட்டில்) ஆடிக்கொண்டே உறங்கிவிடுகின்றன; வண்டுகள் தாலாட்டுப் பண்பாடுகின்றன. ஆற்றின் ஒருபால் தவளைகள் பறை கொட்டுகின்றன; நாரைகள் நடமாடுகின்றன; மற்றொருபால், சாந்து பூசிய - மாலையணிந்த மங்கையர்கள் இடுப்பு ஒடியத் தோள் மெலியத் தெண்ணிர்ப் புனல்குடைகின்றனர். கெடிலம் மலைப்பகுதியிலிருந்து புறப்பட்டு வருகிறது. மழை பொழிய நீர் திரளுகிறது; மணிவகைகள் அடித்துக் கொண்டுவரப்படுகின்றன. ஆற்றின் செழுமையான செல்வங் கொழிக்கும் நீர்ப்பெருக்கு வயல்களில் பாய்ந்து வளப்படுத்துகிறது. ஆற்றின் இருமருங்கும் கரைகள் உள்ளன. கெடில நீர் ஒரு செல்வப் புனலாகும் - தெய்வப் புனலாகும் தீர்த்தப் புனலாகும்” என்றெல்லாம் அப்பர் பெருமான் கெடில ஆற்றின் வளத்தையும் மாண்பையும் வாயாரப் புகழ்ந்துள்ளார். அவர் ஒரிடத்தில் ‘திருநீர்ப் புனல் கெடிலம்’ என்று கூறியுள்ளார். ‘திருநீர்’ என்பது, தீர்த்தம் என்னும் வடசொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லாகும்.

அப்பர் பெருமான் தம் பிற்கால வாழ்க்கையில் காவிரி நாட்டில் பன்னெடுங்காலம் கழித்திருப்பினும், தமது வாழ்நாளின் முற்பகுதியைக் கெடில நாட்டிலேயே கழித்தார். அப்பர் என்னும் கட்டடத்தைக் கட்டுவதற்குச் சேறு குழப்பிய தண்ணீர் கெடில ஆற்றின் தண்ணீர்தான். கெடிலத்தை அப்பர்