பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

470

கெடிலக்கரை நாகரிகம்


8. எட்டண கொட்டை

9. தோட்டிக்குத் தொம்பம் (அல்லது)

தொம்மன பீயம்

10. தோணிக்கு ராசா (அல்லது)

தோட்டிக்கு ராசா.

5. சடுகுடுப் பாடல்கள்

பிள்ளைகள் ஆடும் ‘சடுகுடு’ ஆட்டம் இந்தப் பக்கத்தில் பலி ‘பலிச்சான் கோடு’ என்று சொல்லப்படுகிறது. இந்த ஆட்டத்தின்போது இளைஞர்கள் மூச்சு பிடித்துக்கொண்டு பாடும் பாடல்களுள் சில வருமாறு:

“பலிபலி பலிபலி
பலிபலிக்குது நண்டு கடிக்குது
வரகஞ் சோறு மாரடைக்குறு
தண்ணி கொண்டா பிள்ளை தண்ணிகொண்டா
பாலுஞ் சோறும் மாரடைக்குது
தண்ணி கொண்டா தண்ணிகொண்டா
தண்ணி கொண்டா .... 1
"பலிபலிச்சான் கோடு அடிப்பானேன்
கையும் காலும் முறிவானேன்
கச்சேரிக்குப் போவானேன்
போவானேன் போவானேன்...2
“சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சப்பளாங்கி குடுகுடு குடுகுடு
வாகிட தோகிட வையட நக்கட
காலை முறியடா கட்டிப் பிடியடா
காலை முறியடா கட்டிப் பிடியடா
கட்டிப் பிடியடா பிடியடா பிடியடா
பிடிடா பிடிடா பிடிடா.....3
"சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
கீச்சு கீச்சடா கீரைத் தண்டடா
நட்டு வச்சேண்டா பட்டுப் போச்சடா
பட்டுப் போச்சடா, போச்சடா போச்சடா...4