இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
470
கெடிலக்கரை நாகரிகம்
8. எட்டண கொட்டை
9. தோட்டிக்குத் தொம்பம் (அல்லது)
- தொம்மன பீயம்
10. தோணிக்கு ராசா (அல்லது)
- தோட்டிக்கு ராசா.
5. சடுகுடுப் பாடல்கள்
பிள்ளைகள் ஆடும் ‘சடுகுடு’ ஆட்டம் இந்தப் பக்கத்தில் பலி ‘பலிச்சான் கோடு’ என்று சொல்லப்படுகிறது. இந்த ஆட்டத்தின்போது இளைஞர்கள் மூச்சு பிடித்துக்கொண்டு பாடும் பாடல்களுள் சில வருமாறு:
- “பலிபலி பலிபலி
- பலிபலிக்குது நண்டு கடிக்குது
- வரகஞ் சோறு மாரடைக்குறு
- தண்ணி கொண்டா பிள்ளை தண்ணிகொண்டா
- பாலுஞ் சோறும் மாரடைக்குது
- தண்ணி கொண்டா தண்ணிகொண்டா
- தண்ணி கொண்டா .... 1
- "பலிபலிச்சான் கோடு அடிப்பானேன்
- கையும் காலும் முறிவானேன்
- கச்சேரிக்குப் போவானேன்
- போவானேன் போவானேன்...2
- “சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
- சப்பளாங்கி குடுகுடு குடுகுடு
- வாகிட தோகிட வையட நக்கட
- காலை முறியடா கட்டிப் பிடியடா
- காலை முறியடா கட்டிப் பிடியடா
- கட்டிப் பிடியடா பிடியடா பிடியடா
- பிடிடா பிடிடா பிடிடா.....3
- "சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
- கீச்சு கீச்சடா கீரைத் தண்டடா
- நட்டு வச்சேண்டா பட்டுப் போச்சடா
- பட்டுப் போச்சடா, போச்சடா போச்சடா...4