பக்கம்:கேள்வி நேரம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107


சூடாமணி : நாம் வசிக்கும் இந்த உலகத்திலே நிலப்பரப்பு அதிகமா? நீர்ப்பரப்பு அதிகமா?

குமார் : நிலப்பரப்புத்தான்.

சூடாமணி : தவறு.

ஆனந்த் நீர்ப்பரப்புத்தான்.

சூடாமணி : நிலப்பரப்பு இல்லையென்றால் நீர்ப் பரப்புத்தானே! நிலப்பரப்பு சுமார் 5 கோடியே 73 லட்சம் சதுர மைல். நீர்ப்பரப்பு சுமார் 13 கோடியே 74 லட்சம் சதுர மைல்...காட்மண்டு -இந்தப் பெயரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

சீதாராமன் : எனக்குத் தெரியும். செஞ்சிலுவைச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் பெயர்தான் காட்மண்டு.

ராஜேஸ்வரி 1 இல்லை. அவர் பெயர் காட்மண்டு இல்லை. ஹென்றி டுனான்ட்.

சூடாமணி : ஒரு குறிப்புத் தருகிறேன்.

காட்மண்டு ஒரு நாட்டின் தலைநகரம். இப்போதாவது சொல்ல முடியுமா?

சுப்பிரமணியம் : முடியும். நேபாள நாட்டின் தலைநகரம்தான் காட்மண்டு.

சூடாமணி : ரொம்ப சரி.டில்லி எந்த மாநிலத்தில் இருக்கிறது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/109&oldid=484687" இலிருந்து மீள்விக்கப்பட்டது