பக்கம்:கொடி முல்லை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிதாசன்

31


'மலைக்குகையில் அவளுருவை உரித்துக் கல்லில்
வைத்துள்ளேன்; புலவா! கேள்; இங்கெழுந்த
கலைக்கோயில் ஐந்தினிலே ஒன்றில் அந்தக்
கற்சிலையை நிலைநாட்டி வைப்பேன்; என்றும்
அலைமோதும் கடல்மல்லை என்னுள் ளத்தை.
உளித்திறனை அழியாது காத்து நிற்கும்;
விலைஇல்லாப் புகழன்றி மண்ணில் வாழ்நர்
விரும்புவது வேறுண்டோ? சொல்க!' என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/37&oldid=1253081" இலிருந்து மீள்விக்கப்பட்டது