பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முன்னுரை


சென்ற சில மாதங்களில் நாட்டில் உலவும் பல இதழ் களுக்கு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சில சொற்பொழிவுகளும் இணைக்கப்பெற்றுள்ளன. இஃது ஒரு பொருள் பின்னிய பெருநூலன்று. இந் நூலில் பதினேழு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஒரு சில பொருள் வகையால் ஒத்திருக்கலாம். ஆனால் ஒவ்வொன்றும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு தேவை கருதி எழுதி அனுப்பட்பட்டதாகும். கடவுள் நெறியும் இதில் காட்டப் பெறுகின்றது. உள்ள அழகுக்கு எனச் சில கட்டுரைகளும், உடல் அழகுக்கெனச் சில கட்டுரைகளும் மொழிபற்றிய சில கட்டுரைகளும் இதில் இடம் பெறுகின்றன. மக்கள் வாழ்வுக்கு - சமுதாயத் தேவைக்கு - இன்றியமையாத பொருளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு கட்டுரையும் அமைகின்றது.

இக்கட்டுரைகளின் வழி என்றும் மக்கட் சமுதாயம் மாறுபாடின்றி வாழ வழி கிடைக்குமா என்ற எண்ணத் திலேயே இவற்றைத் தொகுத்து, கொய்த மலர்கள்' என்ற தலைப்பில் இந்நூலை வெளியிடுகின்றேன். பிழை உளதேல் பொறுத்து ஏற்க வேண்டுகிறேன்.

சென்னை-30 }
பணிவார்ந்த,
15—8—60
அ. மு. பரமசிவானந்தம்.