பக்கம்:கொய்த மலர்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் காட்டிய காதல் நெறி 119 இன்பம் குறையும். புலவி ளிேனும் இன்பம் கெடும். இந்த உண்மையை வள்ளுவர், உப்பமைந் தற்ருல் புலவி, அதுசிறிது (1032) மிக்கற்ருல் நீளவிடல் * f t என்கின்ருர். இப்புலவி இல்லையாயின் காமம்-கனியை ஒத்த காமம்-அழுகிய பழமாகவோ அன்றிப் பயனற்ற பிஞ் சாகவோ கெட்டுவிடும் என்பதை மற்ருேர் உவமையி ேைல வள்ளுவர் நன்ருக விளக்குகிரு.ர். துணியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று' (1806) இவ்வாறு புலக்கும் கிலை தலைவியர் மாட்டே உண்டு எனக் காட்டுகின்ருர் வள்ளுவர். இன்றைய உலகத் திலும் இவ்வுண்மையைக் காண முடியுமன்ருே! ஆடவரைக் காட்டிலும் பெண்கள்தாம் ஊடும் கிலேயில் ஊடிக் கணவரிடம் தம் கருத்து முற்றுப் பெற வழி செய்து கொள்ளுகின்றனர். இதைப் புலவி நுணுக்கம் என்னும் அதிகாரத்தால் வள்ளுவர் காட்டுகின்ருர். ஒவ்வொரு குறளும் சிறந்த வகையில் அமைந்துள்ளது. தலைவனுடைய ஒவ்வொரு சொல்லிலும் குற்றங் காண் கிருள் தலைவி; ஒவ்வொரு செயலிலும் குற்றங்காண் கின்ருள் அவள். இவற்ருல் தலைவன் தன்னேவிட்டுப் பிரிந்து சென்ற நிலையைக் குத்திக் காட்டுகின்ருள் தலைவி. அவை எல்லாம் எண்ணி எண்ணிப் பார்க்கின்ற தலைவன் தான் இனிப் பிரியாது கூடி வாழ்வதாக வாக்களித்து அவளுடன் கூடி மகிழ்ந்திருப்பான் அல்லனே! - இந்தப் புலவியின் பாங்கில் அமைந்த ஒரு குறளைத் தான் முதலிலே கண்டோம். பிரிந்த தலைவன் இனி இப் பிறவியில் மட்டுமன்றி எப்பிறவியிலும் பிரியலாகாது எனக் கருதிய தலைவி கண் கலங்கினன் அல்லவா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/121&oldid=812347" இலிருந்து மீள்விக்கப்பட்டது