பக்கம்:கொய்த மலர்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடமொழி - ஆரியம் . சமஸ்கிருதம் 125 ஆசிரியர் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வட சொல் என்று கால்வகைச் சொற்களைக் குறிக்கின்ருர். இங்கே "வடசொல்லுக்கு உரை கூற வந்தவர்கள் வட சொல் என்பது ஆரியச் சொற்போலும் சொல் என்றும், (இளம்பூரணர்) ஆரியச்சொல் (நக்கினர்க்கினியர்) என்றும் காட்டுவர். யாரும் சமஸ்கிருதம்' என்று குறிக்கவில்லை. மற்றும், உரையாசிரியர்கள் காலத்தில் ஆரியச் சொல்லும் வடசொல்லும் ஒன்ருகக் கருதப்பட்டனவென்பது தெளி வாயினும், இளம்பூரணர் வழி, வடசொல் ஆரியச்சொல் போன்ற தமிழ்ச்சொல்லையே குறிக்கும் எனக் கொள்ளல் வேண்டும். இனி இந்த எச்ச இயல் ஐந்தாம் குத்திரம் வடசொல் பற்றியே வருவது, வடசொற் கிளவி வடவெழுத தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” என்பது அது. அதற்கு உரையாசிரியர்கள் பலவகையில் விளக்கம் தருகின்றனர். "வடசொற் கிளவி என்று சொல்லப்படுவது ஆரியத்திற்கே உரிய எழுத்தினே ஒரீஇ இரு திறத்தார்க்கும் பொதுவாய எழுத்தினை உறுப்பாக உடையவாகும் சொல் என்றவாறு என்பர் இளம்பூரணர். கச்சினர்க்கினியரும் சேனவரையரும் இதே பொருள் காட்டுவர். தெய்வச்சிலையார் வடமொழிச் (பிராகிருதம்) சொற்களையும் சேர்ப்பர். எனினும், அச்சொற்கள் வழங் கும் முறை கண்டு வடசொல்லுள்ளும் பெயரல்லது செய்யுட்கு உறுப்பாய் வாரா எனச் சேவைரையரும், 'திசைச் சொல்லும் வடசொல்லும் பெரும்பாலும் பெயர்ப் பெயராயும் சிறுபான்மைத் தொழிற் பெயராயும் வருத -லின்றி ஏனைய வாரா என நச்சினர்க்கினியரும் உரை கூறுவர். அனைவரும் இதற்குக் குங்குமம், கற்குணம், காரணம், காரியம் போன்ற சொற்களைக் காட்டுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/127&oldid=812359" இலிருந்து மீள்விக்கப்பட்டது