பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

காப்பாற்றினாய்” என்று அவன் ஆச்சரியத்தோடும் நன்றியோடும் கூறினான்.

“முதலில் நாம் வெளியே போகலாம். பிறகு எல்லாம் பேசுவோம். வெளியில் கண்ணகியும் சுந்தரமும் காத்திருக்கிறார்கள்” என்று தங்கமணி அவசரப்பட்டான்.

கயிற்றின் உதவியைக்கொண்டே இருவரும் வெளியே வந்தனர்.


13

ந்த வாலிபன் பெயர் மருதாசலம். தங்கமணியும் மற்றவர்களும் அந்தக் காட்டிற்குள் வந்தது அவனுக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. “எப்படி நீங்கள் தனியாக இங்கு வந்தீர்கள்? இது யாரும் நுழையாத காடாயிற்றே!” என்று அவன் மீண்டும் கேட்டான்.

“எல்லாம் அந்தக் கொல்லிமலைக் குள்ளனுடைய சூழ்ச்சி. ஆனால், அவனிடமிருந்து தப்பி வந்துவிட்டோம்” என்று தங்கமணி பதிலளித்தான்.

“கொல்லிமலைக் குள்ளனா! அது யார் அவன்? நான் கேள்விப்பட்டதே இல்லையே!” என்று சந்தேகத்தோடு மருதாசலம் கேட்டான்.

“அவன் தான் சிலைகளைத் திருடும் நெட்டைக்குள்ளன்— பெயர் குள்ளன்; ஆனால். ஆள் நெட்டை” என்று சுந்தரம் சொன்னான்.

“சிலை திருடுகிறானா இவன்? ஓகோ! எனக்கு இப்போது கொஞ்சம் விளங்குகிறது. உடனே நாம் என் தகப்பன் இருக்கும் இடத்திற்குப் போக வேண்டும்” என்று மருதாசலம் கூறிவிட்டு முன்னால் நடந்தான்.

“எங்கள் அப்பாவையும் நாங்கள் கண்டுபிடிக்க வேண்டுமே!” என்று தன் கருத்தை வெளியிட்டான் தங்கமணி.

“உங்கள் அப்பா யார்?”

“அவர் தான் பேராசிரியர் வடிவேல். இங்கே வந்து குள்ளன் கையிலே அகப்பட்டுக்கொண்டுவிட்டார்.”