இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முகவுரை
இதில் உள்ள சிறு கதைகள் வெவ்வேறு சமயங்களில் எழுதியவை. அவ்வப்போது பத்திரிகைக்காரர்கள் கேட்டபோது எழுதி அளித்தவை. இவை யாவுமே பல பத்திரிகைகளிலும் மலர்களிலும் வெளியானவை. வெவ்வேறு மனநிலைகள் இருந்த போது எழுதியவையாதலின் போக்கும் சுவையும் வெவ்வேறாக இருக்கலாம்.
இப்போது இவை ஒரு தொகுதியாக அமுதநிலைய வெளியீடாக வெளியாகின்றன.
இதற்கு முன் வெளியான தொகுதிகளை ஆதரித்த அன்பர்கன் இதனையும் பரிவுகொண்டு ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.
“காந்தமலை” கல்யாண நகர் சென்னை-28 |
அன்பன் கி. வா. ஜகந்நாதன் 20—12—’63 |