பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மலரினும் மெல்லிது



மென்மைஎனில் மலரே,’அதன்
தன்மைமிகும் காமம்நலம்.
பெண்மை,அது மென்மைமலர்;
வன்மைகிளர் ஆண்மை,அது

பெண்மைதனை மேவுங்கலை.
மென்மை,தனி மென்மை;அதன்
தன்மைசிலர் தோய்ந்தோர்எனும்
உண்மைதரும் திருவள்ளுவம்:
 "மலரினும் மெல்லிது காமம்;சிலரதன்
செவ்வி தலைப்படு வார்"

(குறள்: 1289)