உ. ஒளவையார்
-ஒண்டமிழே! பெண்களெல்லாம் வாழப் பிறந்தமையால் என்மனத்தில் புண்களெல்லாம் ஆறப் புரிகண்டாய்.”* எனப் புனல் மதுரைச் சொக்கர் அழகில் சொக்கி மயங்கிய தலைவி, தான் அவர்பால் மாலே வாங்கி வரத் ஆசதாக அனுப்பும் திங் தமிழிடம் கூறுகிருள். என்னே அத்தலைவியின் பேருள்ளம் ! பேருள்ளம் படைத்த அத் தலேவியின் வாயினின்றும் பிறந்த அச்சொற்களில் எவ் வனவு ஆழ்ந்த உண்மை அடங்கியுள்ளது !
உலக மொழிகளுள்ளேயே-இலக்கியங்களுள்ளேயேதமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தனிச் சிறப்புண்டு. அத்தகைய சிறப்பினே நம் அருந்தமிழ் மொழி பெறுதற்குரிய காரணங்கள் பலப்பல. அவற்று ளெல்லாம் தலே சிறந்தது ஆடவரோடு மகளிரும் சரிநிகர் சமானமாய் விளங்கி இலக்கியத்தையும் மொழியையும் பேணி வளர்த்தமையேயாகும். இது வேறு எம்மொழி யினும் நம் செந்தமிழ் மொழிக்கு உரிய தனிச் சிறப்பாகும். தமிழினத்தின் பொற்காலமாய்த் திகழ்ந்த சங்க காலத் இல் மட்டும் முப்பது பெண்பாற்புலவர் தமிழகத்தில் விளங்கி, அருந்தமிழ் மொழியைத் தம் ஆருயிர் எனக் கருதிப் போற்றி வளர்த்தனர் என்ருல், தமிழினத்தின் பெருமையினேயும், தமிழிலக்கியத்தின் வளத்தினேயும் கிறுவிக்காட்ட வேறு சான்றும் வேண்டுங்கொல் சங்க காலத்திற்குப் பின்னும் செந்தமிழ் மொழியையும் இலக் கியத்தையும் போற்றிப் புரந்த நல்லிசைப் புலமை மெல்
ம்ெ எது