பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எல்லாம் ஜின்காவின் முகத்திலும் உடம்பிலும்தான் என்றால் கேட்கவேண்டுமா?

அப்பொழுது ஜின்கா விநோதமாகக் காட்சி அளித்தது. அதைக் கண்டு மூவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.


[2]

சங்ககிரிக்குப் பயணம்!

சென்னையிலிருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் சரியாக இரவு 8 மணிக்குக் கிளம்புகிறது. மூன்று பேரும் சரியாகக்கூட சாப்பிடவில்லை. “சாப்பிடக்கூட உங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. இப்படிச் சரியாக சாப்பிடாமல் பாட்டி வீட்டில் இருக்கக்கூடாது. அங்கே சமத்தாக இருந்து நல்ல பெயர் வாங்கிவரவேணும்” என்று கண்ணகியின் தாய் அவர்கள் மூன்று பேரிடமும் சொன்னாள்.

“அத்தை, கண்ணகி அழாமல் இருந்தால் போதும். நல்ல பெயர் வாங்கி விடுவோம்” என்றான் சுந்தரம்.

“சரிதாண்டா, கோமாளி, நீ உன்னுடைய கோமாளிப் பேச்சையெல்லாம் பாட்டியிடம் காண்பிக்காமல் இருந்தால் போதும்” என்றாள் கண்ணகி.

கண்ணகியின் தாயார் இவர்கள் பேசுவதை ரசித்துக் கொண்டே தான் தயார் செய்து வைத்திருந்த தேன்குழல், முதலிய பலகாரங்களை ஒரு பெரிய டப்பாவில் போட்டுக் கொண்டிருந்தாள்.

“அத்தை, இந்த சங்ககிரிப் பாட்டிக்குப் பல் உண்டா?” என்று கேட்டாள் சுந்தரம்.

5