உமட்ர்ேகிழார் மகளுர் பாங்கொற்றனர் 73 மீது படையெடுத்து வந்து, தாம் கொண்டுவந்த கருத்து நிறைவேறப்பெருமல் வறிதே மீண்டனர் என்ற வரலாற் றினைத் தமிழ் நூல்கள் உணர்த்துகின்றன. அம்மோரியர், வானத்தை அளாவி உயர்ந்த பெரிய தேர்ப்படை உடைய வர் ; அவர்கள், தங்கள் தேர்ப்படை எளிதில் செல்லா வாறு இடையில் தடையாக கின்ற பெருமலைகளை வெட்டி வழி செய்தனர் என்ற வரலாற்றுக் குறிப்பினைக்கொடுத் துள்ளார் பாங்கொற்றஞர் : 'விண்பொரு நெடுவரை இயல்தேர் மோரியர், பொன்புனை கிகிரி கிரிதாக் குறைத்த அறை.” (அகம்: சுக) பாங்கொற்றனர், தாம் பாடிய ஒரு பாட்டிலேயே இரு வரலாற்றுண்மைகளை வகுத்துக் கூறியவராவர். மேலும் பல பாக்களைப்பாடி, அப்பாக்களெல்லாம் நமக்குக் கிடைத் திருக்குமானல், நம் தமிழகத்தின் வரலாறுகளில் பல வற்றை உணரும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கும் ; ஆல்ை, அந்தோ! அவ்வரிய வாய்ப்புதான் தமிழகத்திற் கில்லையே!