பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந க் கீ ரர்

கி. தோற்றுவாய்

உலக உயர்தனிச் செம்மொழிகளுள் ஒன்று என்ற உறுபுகழ் பெற்ற பெருமொழி, ம்ே செந்தமிழ் மொழி: அது, அப் புகழ் பெறுவதற்குக் காரணமாய் விளங்குவன, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெருங் காப்பியம், ஐஞ்சிறு காப்பியம் போன்ற பேரி லக்கியங்களும், தொல்காப்பியம் போன்ற ஒல்காப் புகழ் கொண்ட இலக்கண நூல்களும் ஆம்.

இத்தகைய இலக்கிய இலக்கணப் பெருஞ்செல்வங் களேப் பெற்றுப் பேணித்தந்தவர், கடல்கொண்ட மதுரை யிலும், கபாடபுரத்தும், மதுரையிலும் இருந்து தமிழாய்ந்த புலவர்பெருமக்களாவர்; மதுரையில் அமைந்த கடைச் சங்கத்து இருந்து தமிழாய்ந்த புலவர்கள் காற்பத்தொன் பதின்மர் என்ப; ஆனல் அவர்கள் தொகை, நானூற்றுத் தொண்ணுறுக்கும் மேலாம். அவர்களுள் கலேமைக்கண் கின்றர் நக்கீரர், கபிலர், பரணர் என்ற முப்பெரும் புலவராவர்; இவர்கள் மூவருள்ளும் முதற்கண் வைத்துப் போற்றப்பெறும் பெருமையுடையாரும், தமிழ்ச்சங்கக் தலைவர் என்ற தகுதிப்பாட்டினைப் பெற்ருரும் ஆய பெரும்புலவர் நக்கீரர் ஆவர். தமிழ்ப்புலவர்களுள் தலைமைக்கண் கின்று தமிழ் வளர்த்த அவர்கம் வரலாற்றை ஆறிந்து மகிழ்வ்ோமாக.