பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க9. கருவூர்க் கோசுனுர்

வடநாட்டினின்றும், தமிழ்ார்டு புகுந்து வாழ்ந்த பல் வேறு இனமக்களுள் கோசர் என்பாரும் ஓரினத்தவராவர். தொடக்கத்தில் துளுவநாட்டிலும், கொங்கு மண்டலத் திலும் வந்து வாழ்ந்த இவர்கள், பின்னர்த் தமிழக்ம் முற்றும் பரவி வாழலாயினர் : இவர்கள் விரத்திற் சிறந் தவர் ; வாய்மையில் வழுவாதவர் கெட்டகாலத்தும் விட்டு ங்ேகாது கட்டுத் துனே புரியும் நயமுடையவராவர். இவர்கள் தமிழகத்தில் பயில வாழ்ந்துவிட்டமையால், இவர்களுள் .பலர் தமிழில் பெரும்புலவராய்த் திகழவுமாயினர்; செல் லூர்க் கோசங்கண்ணனுர், கருவூர்க்கோசர்ை என்பார் அவருட் சிறந்தாராவர்; கருவூர்க்கோசனர், கருவூரில் வந்து. வாழ்ந்த கோசர்வழி வந்த புலவராவர். -

கருவூர்க்கோசனர், வடகாடு வளம் குறைந்த காலத்தே பொருள் தேடித் தமிழகம் புக்க குடிவழி வந்தவராதலின் பொருளின் அருமையினே உணர்ந்தவராவர்; பொருள் பெற்றவரே புகழ்பெறுதல் இயலும்; பொருள் பெற்றவரே இன்பம் துய்த்தல் இயலும் பொருள் பெற்றவரே ஈகை :புரிந்து அறஞ்செய்தலும் ஆகும்; ஆனால் அப்பொருள் அரிதின் முயன்று தேடுவார்க்கே அடைதல் இயலும், திரைகடல் ஒடித் தேடார்க்குத் திரவியம் சேராது; அது சேர்ாது எனின், அவை மூன்றும் கிட்டா என்று. தர்ம் கிட்ணர்ந்த அறிவினை உலகறியக் கூறியுள்ளார்.அவர்

'இசையும். இன்பமும், ஈதலும் மூன்றும்

அசையுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு இன்மென வினவயின் பிரிந்த வேறுபடு கொள்கை.

(கம் : உச).