பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

165

சூலக வட்டம் : பல சூல்கள் நிறைந்தது; சூல்தண்டு தடித்தது; உதிரும் சூல்முடி குல்லாய் போன்றது.
கனி : பெர்ரி எனப்படும் சதைக்கனி; சூலறைச் சுவர்களில் உண்டாகும் மயிரிழைகளில் சாறு நிறைந்து இருக்கும். கனி உறை தடித்தது; இதிலும் சுரப்பிகள் பல உள; விதைகள் தொங்கிக் கொண்டிருக்கும்.

நாரத்தையின் பேரினத்தில் நூற்றுக்கணக்கான சிற்றினங்களும், வகைகளும் உள்ளன. எனினும் நாரத்தை முதலானது. இது சிட்ரான் எனப்படும். எலுமிச்சையை, ‘லைம்’, ‘லெமன்’ எனவும் கூறுவர். ‘லிமோனம்’ என்பது இதன் தாவரச் சிற்றினப் பெயர். ‘ஆசிடா’ என்பது புளிப்பு நாரத்தை; குடகு ஆரஞ்சு ‘ஆரண்ஷியம்’ எனப்படும். குளஞ்சி நாரத்தை இனிப்புள்ளது: இதற்கு, ‘லைமெட்டா’ என்று பெயர். இவை அனைத்தும் பெரிதும் கனிக்காகப் பயிரிடப்படுகின்றன. மருந்துக்கும் உதவும்.