இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
208
சங்க இலக்கியத்
மஞ்சரி | : | நுனிவளர் பூந்துணர் |
மலர் | : | மங்கிய செந்நிறம். அவரைப் பூப் போன்றது. |
புல்லி வட்டம் | : | 5 பசிய, மெல்லிய சிறு புல்லிகள் பிரிந்து சிறு பற்கள் போன்றிருக்கும். |
அல்லி வட்டம் | : | 5 இதழ்கள், பதாகையிதழ் மேற்புறத்தும், 2 பக்கவிதழ்கள் இருபுறத்தும் அடியில் தோணி வடிவான இருவிதழ்களும் நீண்டு வளைந்து இருக்கும். |
மகரந்த வட்டம் | : | 9 தாதிழைகள் ஒரு தொகுதியாக உள்ளன. தனித்த மற்றொரு தாதிழை இல்லை. |
சூலக வட்டம் | : | ஒரு சூலக ஓரறைச் சூலகம். பல சூல்கள் சூல்தண்டு குட்டையானது. |
காய் | : | பசிய கொத்தில் பல காய்கள் (4-8) |
கனி | : | வெடியாத உலர்கனி ‘பாட்’ எனப்படும் |
விதை | : | மிகச் சிறந்த செந்நிறமானது. வலிய மூக்கில் கறுப்பு நிறமுள்ளது.புற உறை உடையது. எளிதில் முளைக்காது. அதனால் ஆஸ்மிக் அமிலத்தை (Osmic Acid) 5% கரைசலில் கண்களை நன்கு மூடிக் கொண்டு ஊற வைத்தால், 24 மணி நேரத்தில் விதையுறையில் நுண்ணிய வெடிப்புகள் உண்டாகும். அப்போது முளைக்க வைத்தால், முளை பழுதின்றி வெளி வரும். |
குன்றியின் விதை குன்றிமணியாகும். இதனைப் பொற்கொல்லர் தங்கம் நிறுப்பதற்குப் பயன்படுத்துவர். இதன் நிறத்தைக் கண்டு மயங்கி உண்ணுங் கனியென்று புள்ளினம் பற்றிச் சென்று வேறிடங்களில் வீசி விடுவதால், விதை பரவுதல் நிகழும். இதன் பருப்பு, துவரையின் பருப்புப் போன்றது. ஆனால், இதில் ஏப்ரலின் (Abralin) என்ற நச்சுப் பொருள் (Alkaloid) உள்ளபடியால் உணவாகப் பயன்படாது.