பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

சங்க இலக்கியத்

“பொன்படு கொண்கான நன்னன் நன்னாடு ”-நற். 391 : 6

“பொன்அம் கண்ணி பொலந்தேர் நன்னன்
 சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த
 தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்”
-பதிற்.ப. 40 : 14-16

பாலை நிலப் பாதையில் வாகை மரம் நிழல் பரப்பி வளருமாகலின், இதன் நிழலில் வழிப் போகுநர் தங்குவர். மேலும், இவ்வாகை மரம் எங்கணும் வளர்கின்றதாகலின், இதன் நிழலில் ஊர் மன்றம் கூடும்.

வாகையைப் போன்று மிகப் பெரிய மரம் ஒன்றையும் இந்நாளில் எங்கும் வளரக் காண்கிறோம். இதுவும் வாகையின் தாவரக் குடும்பத்தைச் சார்ந்ததே. இது வாகை மரத்தைப் பல்லாற்றானும் ஒத்தது. இது கருவாகை எனப்படும்.

வாகை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorae)
தாவரக் குடும்பம் : லெகுமினேசி (Leguminosae)
தாவரத் துணைக் குடும்பம் : மைமோசாய்டியே (Mimosoideae)
தாவரப் பேரினப் பெயர் : அல்பீசியா (Albizzia)
தாவரச் சிற்றினப் பெயர் : லெபக் (lebbeck)
சங்க இலக்கியப் பெயர் : வாகை
உலக வழக்குப் பெயர் : வாகை (மரம்)
தாவர இயல்பு : மிக உயர்ந்து கிளைத்துப் பரவிச் செழித்து வளரும் இலையுதிர் பெரு மரம். வறண்ட நிலத்தில் காடுகளிலும் வளரும். எல்லா மாநிலங்களிலும் வளர்கிறது.