பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

376

வளராப் பூந்துணர் அடர்ந்த கொத்தாக உண்டாகும். பூங்கொத்து பெரும்பாலும் வட்டமாகத் தோன்றும்.
மலர் : வெண்ணிறமானது. நறுமணம் உடையது. மலர்ச்செதில்கள் உள்ளன.
புல்லி வட்டம் : 5 பிரிவுள்ள புறவிதழ்கள் அடியில் இணைந்து, குழல் வடிவாக இருக்கும்.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் இணைந்து குழல் வடிவாக உள்ளது. உள்ளே நுண்மயிர்கள் உள. நுனியில் 5 பிரிவானது. இடப்புறமாகச் சுற்றிய அடுக்கானது. மேலே: மடல்கள் விரிந்துள்ளன.
மகரந்த வட்டம் : 5 தாதுக்கால்கள். இழை போன்றவை

தாதுப்பைகள் நீளமானவை.

சூலக வட்டம் : இரு சூலிலைச் சூலகம். பல சூல்கள் தடுப்புச் சுவரில் ஒட்டியிருக்கும். சூல் தண்டு மெல்லியது. சூல்முடி இரு பிளவானது.
கனி : சிவந்த ‘பெர்ரி’ எனப்படும் சதைக்கனி.
விதைகள் : ஆரஞ்சு நிறமானவை சொர சொரப்பானவை. ஆல்புமின் உள்ளவை.

மலைப்புறக் காடுகளிலும் குன்றுகளிலும் வளரும் அடித்தண்டு கருமை சார்ந்த வெளிர் நிறமானது. வலிமையுள்ளது. பெரிதும் வேலிகட்குப் பயன்படுகிறது .

இதன் குரோமோசோம் எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை. இப்பேரினத்தில் உள்ள பிற சிற்றினங்களின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22 ஆகும்.