பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

மல்லிகை
ஜாஸ்மினம் புயூபெசன்ஸ் (Jasminum pubescens,willd.)

மல்லிகை, புதர்ச் செடியாகவும் புதர்க் கொடியாகவும் வளரும் இயல்பிற்று. இது பல்லாண்டு வாழும்; முல்லையின் குடும்பத்தைச் சார்ந்தது. ஆயினும், முல்லையினின்றும் வேறுபட்ட இனம் என்று கூறலாம். மல்லிகையின் இலை, தனியிலை ஆகும். முல்லையின் இலை கூட்டு இலை ஆகும். முல்லையின் மலரைக் காட்டிலும் மல்லிகையின் மலர் சற்றுப் பருத்தது.

சங்க இலக்கியப் பெயர் : மல்லிகை, மல்லிகா
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : அதிரல், குளவி, மௌவல்
பிற்கால இலக்கியப் பெயர் : மல்லிகை
உலக வழக்குப் பெயர் : மல்லிகை
தாவரப் பெயர் : ஜாஸ்மினம் புயூபெசன்ஸ்
(Jasminum pubescens,willd)
ஆங்கிலப் பெயர் : ஜாஸ்மின் (Jasmin)

மல்லிகை இலக்கியம்

சங்க இலக்கியங்களில் பரிபாடலில் மட்டுமே மல்லிகை மலர் குறிப்பிடப்படுகிறது.

“கில்லிகா என்பாள்போல் நெய்தல் தொடுத்தாளே
 மல்லிகா மாலைவளாய்
-பரி. 11:105