பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

510

மலர் : வெண்மை நிறமானது. 5 மி.மீ. அகலமுள்ளது. மலரடிச் செதில்கள் நுண்ணியவை. மலர்க் காம்பு 1.5. செ.மீ. நீளம்.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள் 4 மி.மீ. நீளமானவை. முட்டை வடிவானவை.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் அடியில் ஒட்டியவை. மேலே 15 மி.மீ. அகன்று, விரிந்து, நீண்ட 5 இதழ்களும் காணப்படும்.
மகரந்த வட்டம் : 5 மகரந்தக் கால்கள், மென்மையானவை. அல்லிக் குழலுள் 2-3 வரிசையில் கரோனா செதில்கள் உள்ளன. இவற்றுள் மகரந்தக் கால்கள் இருக்கும். மகரந்தப் பைகள் 5 மி.மீ. நீளமானவை. சூல்முடியுடன் இணைந்தாற் போல், அல்லிக் குழலின் வாயின் மீது செருகப்பட்டிருக்கும்.
சூலக வட்டம் : சூற்பை 2 சூலிலைகளினால் ஆகியது. சூலிலைகள் இணைந்து இருக்கும். பல சூல்கள் கொண்டவை. சூல்தண்டு நூல் போன்றது.
சூல்முடி : முட்டை வடிவாயும், அடிப்பக்கத்தில் பற்கள் கொண்டும் இருக்கும்.
கனி : இரு கனிகள் இணைந்திருக்கும்; வழவழப்பானவை. 22 முதல் 23 செ.மீ. நீளமானவை. ஆனால், மெலிந்தவை. 3-4 மி.மீ. அகலமுள்ளவை. பாலிகுலார் மெரிகார்ப்புகள்.
விதைகள் : மெலிந்தும், அடிப்புறம் கோமா என்ற நுண்மயிர்கள் கொண்டுமிருக்கும்.
கனி : முளை சூழ் தசை இல்லை. வித்திலைகள் அகலமாயும், திருகியுமிருக்கும்.

முளை வேர் குட்டையாகவும், மேல் மட்டமாயும் காணப்படும். இம்மரம் மத்திய இந்தியாவிலும், தென்னிந்தியாவில் எல்லா மாவட்டங்களிலும் உள்ள சிறு காடுகளில் வளர்கின்றது. சிறிய இலையுதிா மரம். ஜே. டீ. ஹூக்கர் இதனைப் பர்மாவில் காண முடியவில்லை என்பார். சூலை, ஆகஸ்டு மாதங்களில் வெண்ணிறமான மலருகுத்துப் பூக்குமென்பர்.