பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

550

சங்க இலக்கியத்

இதற்குப் பாடலம் என்ற பெயரும் உண்டு. இப்பெயரால், வட நாட்டில் ‘பாட்னா’ என்னும் ‘பாடலிபுத்திரம்’ பெயர் பெற்றது. சேக்கிழார் இதனைப்

“பாடலிபுத்திர மென்னும் பதி”[1]

என்கிறார்.

இம்மரத்தின் கிளை, முருங்கை போன்று எளிதில் ஒடியும். புல்லியது. இதனால், இதற்குப் ‘புன்காலி’ என்றறொரு பெயர் உண்டென நிகண்டுகள் கூறும்.

பாதிரி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே (Bicarpellatae)

பர்சொனேலீஸ் (Personales)

தாவரக் குடும்பம் : பிக்னோனியேசி (Bignoniaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஸ்டீரியோஸ்பர்மம் (Stereospermum)
தாவரச் சிற்றினப் பெயர் : ஸ்வாவியோலென்ஸ் (suaveolens, Dc.)
தாவர இயல்பு : பெரு மரம்; மைசூர், மலபார், திருவிதாங்கூர் முதலிய மாநிலங்களில் மலைப் பகுதிகளில் உள்ள இலையுதிர் காடுகளில் வளர்கிறது.
இலை : கூட்டிலை; எதிரடுக்கானது
மஞ்சரி : நீண்ட காம்புள்ள கலப்பு மஞ்சரி.
மலர் : செந்நீல ஊதா நிறமான, நீண்ட, பெரிய பூ; நறுமணமுள்ளது. ஐந்தடுக்கானது. இரு பாலானது.
புல்லி வட்டம் : 5 முக்கோண வடிவான, மஞ்சள் நிறமான, புறவிதழ்கள் குவிந்திருக்கும்.

  1. பெரி. பு: திருநா. 38