பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



109 புராணத்தில் மேற்கூறிய இரண்டு சரித்திரங்களும் வெவ்வேறென்று கூறிப்போந்தனர்.' இனி, இவ்விருசரித்திரங்கட்கும் பற்பலவேறுபாடு களுண்மையால், இவற்றைக் காய்த லுவத்த லகற்றி ஒப்பநாடி ஒருங்கேயாராயும் ஆன்றோர்பலர்க்கும் இவை வெவ்வேறென்பது நன்குவிளங்குமென்க. திருப்புறம்பய புராணம் 6-வது சருக்கத்திலும் திருவிளையாடற் புராணம் 64 வது படலத்திலும் கூறப்படும் சரித்திரங்களிரண்டும் ஒன்றேயாயினும் சிற்சிலவிடங்களில் ஒன்றற்கொன்று முரணுகின்றமை யால், அவற்றின் வன்மை மென்மைகளை ஈண்டு ஆராய்கின்றேன். 1. திருவிளையாடற்புராணத்தில் அரவுகடித்திறந்த வணிகனுக்கு ஆருயிரளித்துத் திருமணஞ்செய்வித்தவர் திருஞான சம்பந்த சுவாமிகள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், திருப்புறம்பயபுராணத்தில் அங்ஙனம் செய்தருளியவர் புறம்பயத்துறை இறைவனேயென்று கூறப்பட்டிருக்கிறது. இவற்றுள் எது வன்மையுடைத்தென்பதை ஆராயவேண்டும். திருஞானசம்பந்த சுவாமிகள் காலத்தினராகிய திருநாவுக்கரசு சுவாமிகள் பாண்டி நாட்டுத் திருப்புத்தூர் தேவாரப்பதிகத்தில் மூன்றாஞ்சங்கத்து' நிகழ்ந்த ஒருநிகழ்ச்சியைக் குறித்திருக்கின்றனர். இதனால் சுவாமிகள் இருவரும் மூன்றாஞ்சங்ககாலத்திற்குப் பின்னரே தமிழ்நாட்டில் விளங்கியவர்களென்பது - போதரும். 4. - மருத்தயில்பாப்புக்காப்புவள்ளலைமனத்துவைத்துத் தருக்கமார் காழிவேந்தர் சடையெனும் யாப்பெடுத்து விரைத்திருமருகறன்னில் வெவ்விடந்தீர்த்ததன்றித் - திருப்புறம்பயத்தலத்திற்றீர்த்தனர் திருக்கண் சாத்தி. வேம்பத்தூரார் திருவிளையாடற்புராணம் 62-வது படலம் 39வது செய்யுள். 5. பரஞ்சோதியார் திருவிளையாடல் 64வது படலம் 24 முதல் 32 வரை. 6. கருணையாலிரங்கிக்கரும்படு சொல்லி கண்ணுதற்கடவுளை நோக்கித் தருணமானனையாள் கணவனையிழந்து தவிப்பது கண்டுளஞ்சகியேன் - வருணமார்வணிகனா ருயிர்மீளவழங்கிட வேண்டுமென்றிரப்ப முரணிலாவிடங்கள் தீர்ப்பவன், போலமுதல்வனு மாங்குவந்தடைந்தான். - திருப்புறம்பயபுராணம் வேது சருக்கம் 35வது செய்யுள். உருத்தவெவ்விடத்தை நீக்கலும் வணிகனுறங்கினன் போல் விழித்தெழுந்தான் பெருத்த பூண்டு முலையாண் மங்கலநாணும் பெற்றனள் பெரியமாலிமையோர் கரத்தனென்றிரப்பக்கடுவிடமுண்டு கமலமான் முதலிய மடவார் திருத்துமங்கலநாணீந்த வனிந்தச்சில் விடந்தீர்ப்பது மரிதோ. ஷ ஷ 36. கசிந்தவெம்பிரான்றன்னுருவெளிப்படக்காட்டி - வசந்தகுத்தன் மாமகடனைவணிகனை மகிழ்ந்தே விசைந்தநல்லியாழ்க்காந்தருவத்தினர்விவாக மிசைந்துகாதலித்திருவருமணத்திரென்றிசைத்தான். க்ஷ செடி 39. 7. கடைச்சங்கம் 8. "நற்பாட்டுப்புலவனாய்ச் சங்கமேறிநற் கனகக்கிழி தருமிக்கருளினேன் காண் திருநாவுக்கரசு சுவாமிகள் - திருப்புத்தூர்ப்பதிகம் 3-ம் செய்யுள்,