பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



-- -- - - 129 வடிக்கும் கருங்குழல் மேலும்வைத் தாள்மொய்த்த வண்டகற்றிக் கொடிக்குங் குமக்கொங்கை மேலுங்கொண் டாள் கொண் டலந்தி (17) பிடிக்குஞ் சிராமலை யாதிதன் பேரருள் போலநன்று நீ தடிக்குங் கலையல்கு வாளன்ப நீதந்த தண்டழையே. (16) தழைகொண்ட கையர் கதிர்கொண்ட மெய்யர் தளர்வுகண்டு பிழைகொண்டு பொய்யென்று பேசிவிட் டேற்கலர் பேரருளால் மழைகொண்ட கண்டர்தம் மானிற் சிராமலை வந்து நின்றார் - உழை கொண்ட நோக்கியின் றென்னுரைக் கேனவ ருற்றிடிலே. (17) பொன்வண்ண மாளிகைப் பூந்தண் சிராமலைப் பள்ளிகொண்ட மன்வண்ண மால்கட னஞ்சம் மிருந்த மறைமிடற்றான் றன்வண்ணந் தீவண்ணங் கண்டு தளிர்வண்ணம் வாடிச்சென்றான் முன்வண்ண நுண்ணிடை யாளெங் ஙனேசெய்யு மெய்ப்பணியே. (22) அயர்ப்புடை யாய்நெஞ் சமேயினித் தேறர மங்கையல்லள் செயிர்ப்புடை யார்தந் திரிபுரஞ் செற்றான் சிராமலைவாய்ப் - பயிர்ப்புடை யாளடிப் பார்தோய்ந் தனபடைக் கண்ணிமைக்கும் உயிர்ப்புடை யாளிவ் வுலகுடை யார்பெற்ற வொல்கிடையே. (24) மதியும் பகைமுன்னை யாயும் பகைமனை யும்மனைசூழ் பதியும் பகைபகை யன்றினென் றும்பகை பான்மைதந்த விதியும் பகையெனிலுமன்ப ரன்பினர் வெள்ளக்கங்கை பொதியுஞ் சடையன் சிராமலை போலுமெம் பூங்குழற்கே. (33) பெண்ணமிர் தைப்பார் பெருந்தே னமிர்தைப் பிறைநுதலை வண்ணப் பயலை தணிவித்தி சேல்வம்மின் செம்மனத்துக் கண்ணப் பனுக்கருள் செய்த சிராமலை யானைக்கண்டு விண்ணப்பமுஞ் செய்து வேட்கையுங் கூறுமின் வேறிடத்தே. (37) காலால் வலஞ்செய்து கையாற் றொழுதுகண் ணாரக்கண்டு மேலா னவருடன் வீற்றிருப் பானெண்ணில் மெய்ப்புலவீர் சேலார் கழனிச் சிராமலை மேயசெம் பொற்சுடரைப் பாலா னறுநெய் யொடாடியை பாடிப் பணிமின்களே (39)