பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் 5 ஒன் வீட்லே. நான் சொத்துக்கு ஆசைப்பட்டு வரதா நினைக்கப் போறாங்களோன்னு எனக்கு ஒரு மாதிரி இருக்கு...' இதுக்கு பேர்தான் தாழ்வு மனப்பான்மை என்கிறது." 'தப்பு, தாழ்வு மனப்பான்மை இல்லை. சுயமரியாதை உணர்வு , '

  • அளவுக்கு மீறிய சுயமரியாதை, ஒருவித தாழ்வு மனப் போக்கு தான்.'

சரி அப்படியே இருக்கட்டும். இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம்." சொல்றதை நல்லா கேளுங்க டியர். இன்னொரு நாளைக்குன்னா அது எ ன் ைன இன்னொருவருடன் நீங்க மணவறையில் பார்க்கிறதாய் தான் இருக்கும். அதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியல. ஒவ்வொரு தற்கொலைக்கும் பின்னணியாய் பல கொலைகாரங்க இருப்பாங்க. ஒ...கே.யு.கேன்...கோ...என் பிரச்சனைக்கு முடிவு கிடைக்கலன்னா, வாழ்க்கைக்காவது முடிவு வரட்டும். ' பானு எழுகிறாள், அவனின் நீட்டிய கரத்தை முரட்டுத் தனமாய் தட்டிவிட்டபடி, சிறிது தூரம் நடந்து, கண்களை இமைகளாலும், முகத்தை கரங்களாலும் மூடியபடி நின்றாள். செல்வம் படபடத்து எழுந்து, அவள் கையை பிரிக்கப்போனபோது, அவள் உள்ளங்கை விரல் கண்ணிரால் அலம்பப்பட்டது போலிருந்ததது.

  • என்ன பானு! பைத்தியம்மாதிரி...'

ஆமாம்! நான் பைத் தியமேதான். இந்தப் பைத் தி யத்தை, அதன் போக்கிலேயே விடுங்க, யூ கேன் கோ!' பானு...'