பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் 6 I இருந்தாலும் இருக்கலாம். நாளையில் இருந்து எந்த இடத்துல எந்தப் பிரச்னை பற்றி தலையைப் பிச்சுட்டு இருக்கப்போlங்களோ...இன்றைக்கு மட்டும், ஒரே கதியாய் பிரச்னை இல்லாமல் இருக்கிற இந்த சந்நியாசியோடு சினிமாவுக்குப் போயிட்டு, பீச்சில நாம் வழக்கமாய் உட் காருற அதே இடத்துல உட்கார்ந்து வேர்க்கடலை கொறிச் சுட்டு வரலாமுன்னு அடியாளுக்கு ஒரு ஆசை போகலாமா சுவாமி!' நோ நோ... இந்த புக்ளை முடிச்சாகணும்!'" என்ன ஆர்கூமென்ட்' என்று கேட்டபடியே மைதிலி உள்ளே வந்தாள். பானு கோபத்தோடு முறையிட்டாள். பாருங்க அண்ணி, பிக்சருக்குப் போகலாம் என் கிறேன். இவர் என்னடான்னா, புக்லயே பிக்சாகி இருக்கார்.' அண்ணி, அண்ணனுக்கு புத்தி சொன்னாள். என்னண்ணா நீங்க... பானு ஆசையோடு கூப்பிடு: றாள்: இப்படி இருந்தால் யாருக்குத்தான் கோபம் வராது. புறப்படுங்க. ஒங்கண்ணன் காரை எடுத்துட்டுப் போயிட் டாரே... நாளைக்கு மைத்துனர் யூஸ் பண்ணுவாரேன்னு, இன்னைக்கு போகவேண்டிய இடத்துக்கெல்லாம் போயிடுற துன்னு புறப்பட்டார்." பானு, இடைமறித்தாள்.

  • என்ன அண்ணி, அண்ணாவுக்கு இல்லாத காரு, இவருக்கு எதுக்கு? கார் அண்ணனுக்குத்தான். இவர் பஸ் லேயே போவார். சரி அண்ணி. இந்த சாமியாரை சினிமா வுக்குப் புறப்படச் சொல்லுங்க!'
  • புறப்படுங்க அண்ணா! ஏய் முத்தம்மா, ஒரு ஆட்டோவைக் கூட்டி வாடி!'