பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 சத்திய வெள்ளம்

வாங்கிக் கொடுக்கத் தரகு வேலை பார்க்கும் எஸ்டேட் அதிபர் ஆனந்தவேலுவும்தான் வி.ஸி.யை ஆட்டிப் படைக் கிறார்கள். n! வீ காண்ட் பெள அவர் ஹெட்ஸ் பிஃபோர் அப்ஸ்ஸர்ட்ஸ். அண்ட் பிம்ப்ஸ்...”

“எங்களுக்காகவாவது நீங்கள் பல்கலைக் கழகத்தில் இருக்க வேண்டும், சார்! பல நூறு ஆசிரியர்கள் வேலை பார்க்கும் ஒரு பெரிய பல்கலைக் கழகத்தைப் பெருமைப் படுத்தும் உண்மை ஒளி உங்களைப் போல் யாராவது ஒருவர் இருவரிடம்தான் இருக்க முடியும் சார்” என்றான் பாண்டியன்.

“இங்கே பயிலும் உன் போன்ற மாணவர்களை எண்ணித்தான் ராஜிநாமாச் செய்யும் எண்ணத்தை ஒவ் வொரு தடவையும் நான் ஒத்திப் போடுகிறேன் பாண்டி யன்.” என்று கூறிவிட்டு ஸ்டாஃப் குவார்ட்டர்ஸை நோக்கி நடந்தார் அவர். பாண்டியன் விடுதி அறைக்குத் திரும்பினான். ஒரு மோசமான அரசாங்கம் கல்விக் கூடங் களிலிருந்து களத்து மேடு வரையில் எல்லா இடங்களிலும் நல்லவர்களையும் திறமைசாலிகளையும் ஒடுக்கிவிட்டு இரண்டாந்தரமானவர்களையும், தீயவர்களையும் அந்தந்த இடங்களில் அதிகாரத்தில் உட்கார்த்தி வைத்துவிட்ட கொடுமையைச் சிந்தித்தபோது மணவாளன் அடிக்கடி சொல்லும் அந்த வாக்கியங்களைப் பாண்டியன் நினைவு கூர்ந்தான். ஒரு பெரிய சத்தியப் பெருக்கில் இந்தப் பொய்கள் எல்லாம் கரைந்து விடும். கரைந்தாக வேண்டும்! அது வரையில் பொறுமையாயிருப்போம்.”

இரண்டாம் தடவையாக எண்ணியபோது மணவாள னின் இந்தப் பொறுமையைவிடக் கதிரேசனின் அந்த அவசரம்தான் சரியோ என்றுகூட ஒரு பிரமை உண்டா யிற்று அவனுள். .

அதிகாலையில் கண்ணுக்கினியாளிடம் பேசி அனுப்பிய பின்னர் பிள்ளையார் கோயிலில் பேராசிரியர் பூதலிங்கத் தையும் சந்தித்துப் பேசிவிட்டுப் பாண்டியன் அறைக்குத் திரும்பியபோது நன்றாக விடிந்து விட்டிருந்தது. அறையில்