பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்தனப் பேழை

61




 அரசியல் தலைவர்கள் எல்லாரும்
மாளிகை வாசலில்
மத்தாப்புச் சுடர்களாக இருந்தனர்.
நீதான்-
ஏழைகள் வீட்டில்
அடுப்பு நெருப்பாக நுழைந்தாய்.


 உடலோடு ஒட்டிக்கொண்டி ருந்தாலும்
நகங்களை வளர்ப்பது
நாகரி கமன்று-என்று
கருதியவன்நீ!
ஆனால்...உனக்குப்பின்
நகங்கள் வளர்ந்து
நம்மையே காயப்படுத் துகின்றன.
நீ கூராக்கிய 'ஊசிகள்'
உன்னையே குத்துகின்றன.


 நீயோ
பேழையிலிருந்து சிரிக்கிறாய்!
உன் சிரிப்புக் குப்பொருளென் னவென்று
நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
'அலெக்சாந்தர் எனக்கு
மகனாகப் பிறந்ததில் சிறப்பில்லை.
ஆனால்...