அறிஞர் அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள் :
சி.என். அண்ணாதுரை
தோற்றம் - 15-9-1909
தந்தை - நடராசன்
தாய் - பங்காரு அம்மாள்
பிறந்த ஊர் - சின்ன காஞ்சிபுரம்
வாழ்க்கைத்துணை - இராணி அம்மையார்
புனைபெயர் - சௌமியன், சமதர்மன், சம்மட்டி, ஒற்றன், ஆணி,பரதன்
1929-34 - சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. ஆனர்சு பொருளியல் பட்டப்படிப்பு.
11-2-34 - முதல் சிறுகதை 'கொக்கரகோ' ஆனந்தவிகடனில் வெளிவந்தது.
1-2-36 - சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கமும் காங்கிரசும் பற்றிச் சொற்பொழிவு.
1936 - சென்னை மாநகராட்சித் தேர்தலில் நீதிக்கட்சி உறுப்பினராக நிற்றல்.
11-4-37 - நீதிக்கட்சிச் செயற்குழு உறுப்பினராதல்
1937 - விடுதலை, குடிஅரசு இதழ்களில் துணை ஆசிரியர் பணி
9-12-37 - முதற்கவிதை, 'காங்கிரஸ் ஊழல்' விடுதலையில்
26-9-38 - இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களைத் தூண்டிவிட்ட குற்றம் சாட்டி நான்கு மாத வெறுங்காவல்
13-1-39 - தமிழுக்காக உயிர்நீத்த நடராசன் இறுதி ஊர்வல நாள் இரங்கற் கூட்டத்தில் உரை