பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

108 சிந்தனை காண்பன கேட்பனவற்றிலே தொடர்ந்து ஏற்படும் ஆர்வம், ஒரே பொருள் காண்போருக்கு, வெவ்வேறு சிந்த னையைக்கிளறி, வெவ்வேறு கருத்தைத் தூண்டி, அதற் கேற்ற முறையிலே, பேச்சுப் பிறக்கச் செய்யும்; வேப்பிலை வைத்தியர், பூசாரி எனும் இருவருக்கும் வேறு வேறான எண்ணம் தருவது போல. ஒரு எடுத்துக் காட்டு. குதிரையைப் பற்றி பேசும்படி சிலருக்கு அழைப்பு விட்டுப் பார்ப்போம் - வேடிக்கையாக இருக்கும் அவர்கள் பேச்சு. வரலாற்று வகுப்பு மானவர் பேசுவதானால். குதிரைக் ளுக்குக் கம்பீரமும் பெருமையும் ஏன் ஏற்படாது. மகா வீரன் அலெக்சாண்டர் ஏறி வந்தது, ப்யூசிபாலஸ் எனும் குதிரை மீது அல்லவா. என்று சுவையுறச் சொல்வார்: தமிழக ஏடு படித்தோர், தேசிங்கு ராஜா கதையில் வரும் பாராசாரி. நீலவேணி பற்றிப் பேசாமலிரார். பழம் பாடல் படித்தோர், முன் இருவர் தொட்டிழுக்க பின்னிருந்து சிலர் தள்ள, மாதம் காதவழி பறந்த குதிரை யைக் காளமேகம் கண்ட காட்சியைப்பற்றிக் கூறுவர். கிண்டி குதிரைப் பந்தயத்தின் கேடுகளை விளக்கும் நோக்க முடையோரோ, தாலி அறுக்கும் பிசாசே! தந்தைக்கும் தனயன்க்கும் பகை மூட்டும் சனியனே ! சூழ்ச்சியிலே மக்களைச் சிக்க வைக்கும் சகுனியே ! நேசர்களுக்கிடையே மனக்கிலேசத்தைக் கிளப்பி விடும் மாபாவியே உன்னால் கெட்டன குடும்பங்கள். கொழுத்தனர். வட்டிக் கடைக் காரர். குடித்தனத்திலே தீ மூட்டினாய். கொலைக்கும் களவுக்கும் கூட காரணமானாய். குதிரையே கோரத்தின் சொரூபமே. பாவத்தின் கருவியே! பாதகத்தின் பங்கா ளியே ! உன் குலம் அழிக, கூண்டோடு அழிக. பூண்டின் றீ ஒழிக என்று கோபமாகக் கூறுவர். ஒரு சமயம் பிரம