பக்கம்:சமுதாய வீதி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி 13s

மனப்பேன்-வசனகர்த்தா முத்துக்குமரனின் சபதம்னு எழுதிக்கிட்டிருக்காரே அந்த ஆளு? இதைக் கோபால் சார் பார்த்தா என்ன நெனைப்பாரு?" .

"ஒகோ! நீ கோபால் சாருக்கு நடுங்க ஆர்ம்பிச் சாச்சா. உருப்பட்டாப்லதான் போ...'

"நடுங்கலே. சும்மா ஒரு இதுக்குச் சொன்னாலே இப்பிடிக் குத்திக் காட்டlங்களே?

"புலிகளுக்கு நடுங்கும் மான்களை எனக்குப் பிடிப்ப தில்லை...' - -

"அப்படியானால் நான் நடுங்கற அந்தப் புலி இங்கே தான் இருக்காக்கும்...' என்று அவனுடைய நெஞ்சைத் தொட்டுக் காண்பித்து விட்டுச் சிரித்தாள் மாதவி. முத்துக் குமரனும் பதிலுக்குச் சிரித்தான். ஆனாலும் அவன் மனத் தின் அந்தரங்கத்தில் அவள் நடிகன் கோபாலுக்காகப் பயந்து சாகிறாள் என்பது புரிந்துதான் இருந்தது. அவளு டைய பேதமையை அளவுக்கு மீறிச் சோதித்துப் பய முறுத்த அஞ்சியே இவன் அப்போது சிரித்துவிட்டுச் சும்மா இருந்தான் என்று சொல்ல வேண்டும். அவளோ அவனு டைய கம்பீரத்துக்கு முன் தன்னுடைய பயம் என்ற சிறு மையை வைப்பதற்கு அஞ்சித் தயங்கி நின்று விட்டாள். ஜில்ஜில் மேலும் சில உப்புச்சப்பில்லாத கேள்விகளைக் கேட்டுப் பதில்களையும் வாங்கிக் கட்டிக்கொண்டு போப் விட்டான்.

அன்றிரவு ஸ்டேஜ் ரிஹர்சல் நாரதகான சபா கீத்துக் கொட்டகையில் நடந்தது. ரிஹர்சல் அபார வெற்றிதான். முடியும்போது இரவு பதினோரு மணி. எட்டு மணிக்குத் தொடங்கிப் பதினோரு மணிக்குக் கச்சிதமாக நாடகம் முடிந்தது. மூன்று மணி நேரமே இருக்கலாமா, இரண் டரை மணி நேரமாகக் குறைத்துவிடலாமா என்று.

9 مسستينغ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/135&oldid=560932" இலிருந்து மீள்விக்கப்பட்டது