பக்கம்:சமுதாய வீதி.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

名壬& சமுதாய வீதி

கித்தானா அல்லது ஏதாவது உள்ளர்த்தத்தோடு உபயோ கித்தானா என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் உள் ளேயே புழுங்கினாள் அவள். இந்நிலையில் உதயரேகா வின் நடத்தையைப்பற்றி மேலே பேச்சை வளர்ப்பது இரு வரும் சுமுகமாகப் பேசிக் கொண்டிருக்கும் அமைதியான சூழ்நிலையைக் கெடுப்பதாக முடியும் என்று எண்ணிப் பயத்தோடு அந்தப் பேச்சை நிறுத்தினாள் அவள்.

ိ တိံ ိ

கோலாலும்பூரில் முதல் நாள் நாடகம் நல்ல வசூலைத் தந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளுக்கும் ஹெவி புக்கிங் இருப்பதாக அப்துல்லா கூறிக்கொண்டி ருந்தார். வந்த இரண்டாவது நாள் மத்தியானம் ருத்ர பதி ரெட்டியாரின் கார் ஸ்டிரெயிட்ஸ் ஹோட்டலுக்கு. வந்து அவர்களை விருந்துக்கு அழைத்துக்கொண்டு போயிற்று. ருத்ரபதி ரெட்டியார் குடியிருந்த பெட்டா லிங்ஜெயா பகுதி புதிய புதிய நவீனக் கட்டிடங்களைக் கொண்டிருந்தது. கோலாலும்பூரில் புதிய அழகிய எக்ஸ் டென்ஷன் என்று அதைப் பற்றி ருத்ரபதி ரெட்டியாரின் டிரைவர் விவரித்துக் கூறினான். ருத்ரபதி ரெட்டியார் மலேயாவுக்கு வந்து பெரும் பணக்காரராகியிருப்பதா கத் தெரிந்தது. முதல் தரமான பாண்டிய நாட்டுச் சைவச் சமையல் விருந்தில் கிடைத்தது.

விருந்து முடிந்ததும் மாதவிக்கு ஒரு மெல்லிய தங்கச் சங்கிலியையும், முத்துக்குமரனுக்கு ஒர் உயர்தரமான nகோ கைக்கடிகாரத்தையும் அன்பளிப்பாக வழங்கி னார் ரெட்டியார். அவர் மாதவியிடம் தங்கச் சங்கி வியை வெற்றிலை பாக்குப் பழத்தோடு வைத்துக் கொடுக்க முன் வந்தபோது அதை வாங்கிக் கொள்ள லாமா கூடாதா என்பது பற்றி முத்துக்குமரன் என்ன நினைக்கிறான் என்று அறிய விரும்பியவள் போல தயக் கத்தோடு அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் அவள். முததுககுமரன அவள் பயத்தைக் கண்டு சிரித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/250&oldid=561052" இலிருந்து மீள்விக்கப்பட்டது