பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை

 "சிந்தனைக் களஞ்சியம்" என்னும் இந்நூல், சிரித்து, சிந்தித்து மகிழ்வதற்கு ஏற்ற அருமையான நூல்.

திருக்குறளார் அவர்கள் பேசும்போது, நகைச்சுவையோடு, நம்மைச் சிந்திக்கவும் வைத்து விடுவார். அவருடைய எழுத்துக்களைப் புத்தக வடிவில் படிக்கும்போது, என்றும் நமக்குக் கைவிளக்காக இருந்து நம்மை வழிநடத்திச் செல்லும்–கருத்துக்களை அளிக்கும்.

தமிழ்ப்பெருமக்கள் தரமான கருத்துக்களை வரவேற்பவர்கள், அதுவும் திருக்குறள் சிந்தனை என்றால்– அதுவும் திருக்குறளாரின் கைவண்ணம் என்றால்– எவ்வளவு ஆனந்தப்படுவார்கள். அவர்களுக்கு இந்நூல் ஒரு நல்விருந்து.

அற்புதமான சிந்தனைக் களஞ்சியத்தை வழங்கிய திருக்குறளார் அவர்களுக்கும், இதை வரவேற்கும் தமிழ்ப் பெருமக்களுக்கும் எங்கள் நன்றி.

அன்புடன்,
வானதி திருநாவுக்கரசு