பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், முதல் பதிப்பு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எங்கள் நோக்கம்

சிந்தனையிலே சிறந்து ; அறிஞர் அவையிலே அளவளாவி ; அன்பே உருவாகிய ;சிந்தனை சிற்பி மா.சிங்கார வேலரை அறியாதோர் யாருமிலர் . அவர் மீன்பிடிக்கும் சமூகத்தில் பிறந்து ; தேசிய இயக்கத்தில் தவழ்ந்து ஏகாதிபத்தியதிற்கு முதல் வைரியாகி ;பாட்டாளியாகி மக்களுக்காக பாடுபட்டு ; பொதுவுடைமை கொள்கைப் பூண்டு, சுயமரியாதை தூண்ட, பகுத்தறிவை ஆயுத மாக கொண்டு , மக்கள் ஆட்சி மலரவேண்டுமென்று அதற்காகத் தன்னுடைய உடல் தளர்ந்தாலும் ஊக்கம் தளராது உழைத்த நேரத்திலே மறைந்தார் மறைக்கப்பட்டார் . மறைத்தார்கள் .

அந்த நேரத்தில்தான் தென்னாட்டு பெர்னாட்ஷா ,திராவிடர்க்கோர் ஏக தளபதி, பகுத்தறிவின் பாசறை ; அறிவின் சுடர் சி.என் . அண்ணாதுரை அவர்கள் மறைந்த மாவீரரை மக்கள் மன்றத்திலே உலவவிட்டார்.

அந்த நேரத்திலேதான் முற்போக்கு எண்ணம் கொண்டோர் அனைவரும் அவரைப்பற்றி சிந்திக்கத் தொடங்கினார், அந்த சிந்தனை என்றும் மாறாதவாறு அவர் எதற்காக பாடுபட்டரோ அதை அவர்பால் இரக்கங் கொண்டோர் அனைவரும் செய்துமுடிப்பர் என்ற நல்ல எண்ணதோடு இதை வெளியிடுகிறோம். அன்பர்கள் ஆதரவு தந்த ஆதரிப்பார்களாக.

இதை நூல் வடிவில் வெளியிட அனுமதி தந்த “திராவிட நாடு” ஆசிரியர் சி .என்.அண்ணாதுரை எம்.ஏ. அவர்களுக்கும், எங்கள் வேண்டுகோள்களுக்கு இணங்கி முன்னுரை தந்து ஊக்குவித்த அறிஞர் கா. அப்பாதுரை எம்.ஏ., எல்.டி. அவர்களுக்கு , இப்புத்தகம் வெளிவர உதவியாய் இருந்த அன்பர்களுக்கு எங்களது நன்றியும் வாழ்த்துதலும் உரித்தாகுக .

சென்னை,
திருவல்லிக்கேணி.

வெளியிடுவோர் :
மீன் பிடிப்போர் கிளைச் சங்கத்தார்.